ரஜினி அரசியலுக்கு வரவில்லை: லதா ரஜினிகாந்த் உருக்கமான பேச்சு

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது மிகப்பெரிய இழப்பு என்றும், சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ போல தமிழகத்தை மாற்ற அவர் விரும்பியதாகவும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

'மக்கள் மேடை' என்ற புதிய மக்கள் இயக்கத்தை லதா ரஜினிகாந்த் சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். இந்த இயக்கத்தின் மூலம் மாநிலத்திற்காக பணியாற்ற விரும்புவோர் இணையலாம் என்றும், பெரிய மக்கள் சக்தியாக உருவாகி மாநிலத்திற்கு பல நன்மைகளைச் செய்ய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருந்தார். உள்ளூர் அளவில் புதிய தலைவர்களை உருவாக்கி, மக்களின் சிந்தனைகளை மாநில வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதுடன், லதா ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப் போகிறாரா என்ற கேள்வியையும் எழுப்பியது. இந்நிலையில், ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அப்போது பேசிய லதா ரஜினிகாந்த், "ரஜினிகாந்த் ஒரு பெரிய தலைவர். 2021ல் அவர் அரசியலுக்கு வராதது மிகப்பெரிய மிஸ். ஒரு பெரிய தலைவரை நாம் இழந்துவிட்டோம். அவர் வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஏனெனில், அவருக்கு பல திட்டங்களும் கனவுகளும் இருந்தன. துரதிர்ஷ்டவசமாக, கோவிட் காலத்தில் அவர் அப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர் திட்டமிட்டிருந்தார். சிங்கப்பூரின் லீ குவான் யூ செய்தது போல தமிழகத்தில் செய்ய வேண்டும் என நினைத்தார். அவரது தொலைநோக்குப் பார்வையை நான் அறிவேன். தமிழகம் ஒரு பெரிய தலைவரை இழந்துவிட்டது" என்று வேதனையுடன் தெரிவித்தார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

ரஜினி அரசியலுக்கு வராதது மிகப்பெரிய இழப்பு – லதா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு மிகச்சிறந்த தலைவர் என்றும், அவர் அரசியலுக்கு வராதது மிகப்பெரிய இழப்பு என்றும் லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அவர் அரசியலுக்கு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஜினி மீது மற்றவர்களுக்கு பொறாமை இருக்கலாம் என்றும், ஆனால் தன் குடும்பத்திற்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை என்றும் அவர் கொந்தளிப்புடன் கூறினார்.

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில், லதா ரஜினிகாந்தின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

ரஜினி அரசியலுக்கு வராதது தமிழ்நாட்டிற்கு ஒரு பெரிய இழப்பு என பலரும் கருதுகின்றனர். இந்த சூழலில் லதா ரஜினிகாந்தின் கருத்து அவரது ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version