கும்ப ராசிக்கு யோகம்: 14.6.2026 முதல் 20.6.2026 வரை பலன்கள்

வரும் ஜூன் 14 முதல் 20, 2026 வரையிலான வாரத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் மற்றும் புதன் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. இது புத ஆதித்ய யோகத்தை உண்டாக்கும்.

இந்த யோகத்தால், நீங்கள் கற்ற கல்வியால் வெற்றி, புகழ், மதிப்பு, மரியாதை ஆகியவற்றை பெறுவீர்கள். தாய், தந்தையின் அன்பும் ஆதரவும் பெருகும். பிரிந்து சென்ற பிள்ளைகள் மீண்டும் வந்து உங்களுடன் இணைவார்கள். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். அரசாங்க காரியங்களில் லாபமும் அனுகூலமும் ஏற்படும்.

கூலித் தொழிலாளர்களின் நிலைமை சீராகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வருகையால் உங்கள் மனம் மகிழும். உயர்ந்த ரக வாகன வசதி அமையும். பெண்கள் தங்கள் பிறந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள். இருப்பினும், சிலர் ஆடம்பரமாக வாழும் ஆசையில் அதிக கடன் வாங்கி சிரமப்பட வாய்ப்புள்ளது. எதிரிகளின் தொல்லை குறையும்.

தேவையற்ற பயணங்களையும், வம்பு வழக்குகளையும் தவிர்க்கவும். அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களுக்கு, இரவும் பகலும் நீங்கள் படித்த படிப்பு கை கொடுக்கும். உடல் அசதி, சளி, இருமல் போன்ற சிறு சிறு அசௌகரியங்கள் ஏற்படலாம். சனிக்கிழமை அன்று எள் சாதம் வழங்குவது சிறப்பான பலனைத் தரும். தொடர்புக்கு: ‘பிரசன்ன ஜோதிடர்’ ஐ. ஆனந்திசெல்: 98652 20406.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

கும்ப ராசிபலன்: முன்னேற்றமும், மன நிம்மதியும் நிச்சயம்!

வரும் ஜூன் 7 முதல் 13, 2026 வரையிலான வாரத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு முன்னேற்றமான சூழல் நிலவும். ராசிக்குரிய பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி புதன் ஆட்சி பலம் பெறுவதால், மனம், புத்தி, செயல் மூன்றிலும் ஒருமித்த தன்மை உண்டாகும். குல தெய்வத்தின் அருளும், முன்னோர்களின் ஆசியும் உங்களுக்குக் கிடைக்கும்.

தொழில் துறையில் சிறப்பான வளர்ச்சி ஏற்படும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கைகூடும். குடும்பத்தில் இதுவரை இருந்த குழப்பங்கள், சம்பந்தம் இல்லாத மூன்றாம் நபரால் தீர்ந்து, அமைதி திரும்பும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அறியாமல் வாங்கிய வில்லங்க சொத்துக்களுக்கு உரிய பட்டா மற்றும் முறையான ஆவணங்கள் விரைவில் கிடைக்கும்.

மாணவர்களுக்கு உயர் கல்விக்காக விரும்பிய கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கும். பருவ வயதுப் பெண்களுக்கு மனதிற்கு பிடித்த மணாளன் மாலை சூடும் வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியத்திற்காகக் காத்திருப்பவர்களுக்கு, அதிலிருந்த காலதாமதம் நீங்கி, நற்செய்தி வரும். தடைபட்ட வாடகை வருமானம் மீண்டும் கிடைக்கத் தொடங்கும்.

நீண்ட நாட்களாக நோயின் காரணமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றவர்கள் வீடு திரும்புவார்கள். பிள்ளைகளால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிரதோஷ நாளன்று வாசனை திரவியங்களால் சிவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு.

– 'பிரசன்ன ஜோதிடர்' ஐ. ஆனந்தி, செல்: 98652 20406

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version