வரும் ஜூன் 14 முதல் 20, 2026 வரையிலான வாரத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் மற்றும் புதன் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. இது புத ஆதித்ய யோகத்தை உண்டாக்கும்.
இந்த யோகத்தால், நீங்கள் கற்ற கல்வியால் வெற்றி, புகழ், மதிப்பு, மரியாதை ஆகியவற்றை பெறுவீர்கள். தாய், தந்தையின் அன்பும் ஆதரவும் பெருகும். பிரிந்து சென்ற பிள்ளைகள் மீண்டும் வந்து உங்களுடன் இணைவார்கள். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். அரசாங்க காரியங்களில் லாபமும் அனுகூலமும் ஏற்படும்.
கூலித் தொழிலாளர்களின் நிலைமை சீராகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வருகையால் உங்கள் மனம் மகிழும். உயர்ந்த ரக வாகன வசதி அமையும். பெண்கள் தங்கள் பிறந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள். இருப்பினும், சிலர் ஆடம்பரமாக வாழும் ஆசையில் அதிக கடன் வாங்கி சிரமப்பட வாய்ப்புள்ளது. எதிரிகளின் தொல்லை குறையும்.
தேவையற்ற பயணங்களையும், வம்பு வழக்குகளையும் தவிர்க்கவும். அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களுக்கு, இரவும் பகலும் நீங்கள் படித்த படிப்பு கை கொடுக்கும். உடல் அசதி, சளி, இருமல் போன்ற சிறு சிறு அசௌகரியங்கள் ஏற்படலாம். சனிக்கிழமை அன்று எள் சாதம் வழங்குவது சிறப்பான பலனைத் தரும். தொடர்புக்கு: ‘பிரசன்ன ஜோதிடர்’ ஐ. ஆனந்திசெல்: 98652 20406.


