கேரளாவில் UDF பதவியேற்பு: LDF பங்கேற்பு – சிபிஐ மாநிலச் செயலாளர் அறிவிப்பு!

கேரளாவில் புதியதாக அமையவுள்ள ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அரசின் பதவியேற்பு விழா மே 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முக்கிய நிகழ்வில், எதிர்க்கட்சியான இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) பங்கேற்கும் என சிபிஐ மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அதிரடியாக அறிவித்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு இடதுசாரி முன்னணி ஆட்சி அமைந்தபோது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி விழாவுக்குப் புறக்கணித்தது. ஆனால், இந்த முறை இடதுசாரி முன்னணி ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும் என்றும், அதனால் விழாவில் அனைவரும் பங்கேற்பார்கள் என்றும் எம்.வி. கோவிந்தன் விளக்கினார். 'சரியானதை முழுமையாக ஏற்றுக்கொண்டு, தவறானதை வன்மையாக விமர்சிப்பதன் மூலம் இடதுசாரிகள் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படுவார்கள்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

கேரளாவின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக பினராயி விஜயன் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 'முதலமைச்சரை அறிவித்த உடனேயே நாங்கள் எதிர்க்கட்சித் தலைவரை அறிவித்துவிட்டோம். முதலமைச்சர் இல்லையென்றால் எதிர்க்கட்சித் தலைவருக்கு என்ன வேலை?' என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இது குறித்தும் கட்சிக்குள் விவாதங்கள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

சட்டமன்றத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி சந்தித்த பெரும் தோல்விக்கான காரணங்கள் குறித்து, தெளிவான புரிதலை எட்டுவதற்காக, கட்சிக்குள் பல்வேறு மட்டங்களில் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டு வருவதாக எம்.வி. கோவிந்தன் கூறினார். கேரளாவில் இடதுசாரி முன்னணியின் செல்வாக்கு முடிவுக்கு வந்துவிட்டது என்ற ஊடகங்களின் செய்திகளை அவர் மறுத்ததோடு, தேவையான மாற்றங்களைச் செய்து, எல்.டி.எஃப் கூட்டணி மீண்டும் பிரம்மாண்டமாகத் திரும்பும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version