நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இன்று காலை தரையிறங்கும்போது தீவிபத்தில் சிக்கிய துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 288 பேர் நூலிழையில் உயிர் தப்பினர்.
துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து வந்த ஏர்பஸ் ரக விமானம், காத்மாண்டு விமான நிலையத்தில் தரையிறங்கிய போது அதன் வலது பக்கப் பின்சக்கரத்தில் தீப்பிடித்தது.
சக்கரத்தில் தீ காணப்பட்ட உடனேயே மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
Turkish Airlines plane tyres caught fire in Kathmandu, Nepal. All passengers and crew were evacuated. pic.twitter.com/AVYJ5Oq41P
விமானத்தில் இருந்த 277 பயணிகள் மற்றும் 11 ஊழியர்கள் என மொத்தம் 288 பேரும் எந்தவித காயமுமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஞானேந்திர புல் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காத்மாண்டு விமான நிலையம் சுமார் ஒரு மணி நேரம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் மற்ற விமானங்களின் சேவையில் சிறிது தாமதம் ஏற்பட்டது.

