கரூர் உயிரிழப்பு: அரசு பணி ஆணைகள் ரத்து – உயர்நீதிமன்றம் உத்தரவு

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் வழங்கியதாகக் கூறப்படும் அரசுப் பணி ஆணைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த அரசாணைகளை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது அரசின் கொள்கை முடிவு என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், கரூர் கூட்ட நெரிசலை காவல்துறை சரியாகக் கையாளாததே உயிரிழப்புக்குக் காரணம் என்றும், உயிரிழந்த 41 பேர் மீதும் எந்த தவறும் இல்லை என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.

கருணை அடிப்படையிலான பணி நியமனங்களுக்கு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அனுமதி தேவையில்லை என டி.என்.பி.எஸ்.சி. தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனைக் கேட்டறிந்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு சாதாரண பணி வழங்கியதாக அரசு கூறுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தனர். மேலும், அரசு பேருந்து மோதி உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கும் இதேபோல் அரசுப் பணி வழங்குவீர்களா? என்றும் தமிழ்நாடு அரசுக்குக் கேள்வியெழுப்பினர்.

கருணை அடிப்படையில் வேலை பெற பலர் காத்திருக்கும் நிலையில், கரூர் கூட்ட நெரிசல் துயரத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு மட்டும் ஏன் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் தவித்த தமிழ்நாடு அரசு, 41 பேருக்கு அரசு வேலை வழங்கிய அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு, இதுபோன்ற துயர சம்பவங்களில் அரசு நியாயமான மற்றும் பாரபட்சமற்ற முறையில் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version