ஜனநாயகன் பட வழக்கு: 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியான விவகாரத்தில், முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை சைபர் கிரைம் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

ஏப்ரல் 3-ந்தேதி, 'ஜனநாயகன்' திரைப்படம் தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வு குழுவின் முன் ஆய்வுக்காக இருந்த நிலையில், சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியானது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்சன்ஸ், இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தது.

புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதுவரை 9 பேரை கைது செய்துள்ளனர். இதில், உதவி எடிட்டர் பிரசாந்த், செல்வம், பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் முக்கிய குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். இவர்களின் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் அவர்களைக் கைது செய்ய சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது திரைப்படத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version