ஐபிஎல் 2026 சீசனில், பல பந்துவீச்சாளர்களுக்கு பெரும் ஊதியம் வழங்கப்பட்ட போதிலும், அவர்களின் செயல்பாடுகள் அணி நிர்வாகங்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. குறிப்பாக, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, கேமரூன் கிரீன், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் போன்ற முன்னணி வீரர்கள் ஒரு விக்கெட் எடுக்க அணி நிர்வாகம் எவ்வளவு செலவு செய்துள்ளது என்பதை விரிவாகக் காண்போம்.
இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ₹18 கோடி ஊதியத்தில் தக்கவைக்கப்பட்டார். ஆனால், அவர் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். இதனால், ஒரு விக்கெட்டுக்கு ₹4.50 கோடி செலவாகி, அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா ₹16.35 கோடிக்கு வாங்கப்பட்டு, 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். ஒரு விக்கெட்டுக்கு ₹4.09 கோடி செலவானது, இது உரிமையாளர் தரப்புக்கு பெரும் தோல்வியாக அமைந்தது.
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன், ₹25.20 கோடி என்ற மிகப்பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வெறும் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். ஒரு விக்கெட்டுக்கு ₹3.60 கோடி செலவானது, இது ஐபிஎல் வரலாற்றில் எந்தவொரு அணிக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய நிதி இழப்புகளில் ஒன்றாக பதிவானது. மேலும், யுஸ்வேந்திர சாஹல் ₹18 கோடிக்கு ஒப்பந்தமாகி 12 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல் ₹16.50 கோடிக்கு 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இருவருக்கும் ஒரு விக்கெட்டுக்கு சராசரியாக ₹1.50 கோடி செலவாகி, எதிர்பார்த்த தாக்கத்தை முழுமையாக ஏற்படுத்தவில்லை.
குல்தீப் யாதவ் ₹13.25 கோடிக்கு ஒப்பந்தமாகி 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஒரு விக்கெட்டுக்கு ₹1.33 கோடி செலவானது. அர்ஷ்தீப் சிங் ₹18 கோடி முதலீட்டில் 14 விக்கெட்டுகள் எடுத்தாலும், ஒரு விக்கெட்டுக்கு ₹1.29 கோடி செலவாகியது. இவர்களின் திறமைக்கும், பெற்ற ஊதியத்திற்கும் ஏற்ப விக்கெட் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை. ஆடுகளங்கள் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறி இருப்பதே இதற்குக் காரணம் என்ற விமர்சனமும் பரவலாக எழுந்துள்ளது.

