‘ராமர், கிருஷ்ணரை பார்த்ததில்லை; மோடியைப் பார்த்தேன்’ – நடிகர் தனிகெல்லா பரணி

நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா என பன்முகத்தன்மை கொண்ட இந்திய கலைஞர்களில் ஒருவர் தனிகெல்லா பரணி. இவர் தெலுங்கு திரையுலகம் மட்டுமின்றி தமிழ், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் கில்லி (விஜய்யின் தந்தையாக), பத்ரி, மஸ்குவாரே போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே நன்கு அறியப்பட்டவர்.

இந்நிலையில் நடிகர் தனிகெல்லா பரணி பிரதமர் மோடிகுறித்து வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவு ஒன்று கவனம் ஈர்த்து வருகிறது.

அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில்,

“நான் ராமரைப் பார்த்ததில்லை, கிருஷ்ணரைப் பார்த்ததில்லை, ஆதி சங்கரரைப் பார்த்ததில்லை, விவேகானந்தரைப் பார்த்ததில்லை.

அதாவது, நம்மால் அவர்களை பார்க்க முடியாது.

ஆனால், இவர்கள் அனைவரின் உருவமாகவும் விளங்கும் மோடி அவர்களை நான் பார்த்துவிட்டேன், அவரை கட்டி அணைத்தேன், அவரோடு கைக்குலுக்கினேன்.

என் பிறப்பு ஆசீர்வதிக்கப்பட்டது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version