“ஒரு சீட்ட வச்சிக்கிட்டு..’’- நடிகை ஷனம் ஷெட்டி பரபரப்பு கருத்து

தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான முயற்சியில் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டு வருகிறது. எனினும், பெரும்பான்மையை (118 எம்.எல்.ஏ.க்கள்) நிரூபிக்க வேண்டிய சூழல் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு (சி.பி.ஐ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சி.பி.எம்.) ஆகிய கட்சிகள் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன.

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை அடுத்து தவெகவுக்கு தற்போது வரை 117 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது. 2 இடங்களை வைத்துள்ள விசிக, தனது நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ஆட்சி, அதிகாரத்தில் விசிக பங்கு கேட்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில், நடிகை ஷனம் ஷெட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பரப்பரப்பான கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் “இந்த ஒரு சீட்.. ரெண்டு சீட் வச்சிருக்கிறவங்க பண்ற அட்ராசிட்டி இருக்கே’’ என பரபரப்பு பதிவிட்டுள்ளார். இப்பதிவுக்கு நெட்டிசன் ஒருவர், “அதுவும் மக்கள் தீர்ப்பு தான்.. அதை சாதாரணமாக எடுக்காதீர்கள் மேடம்’’ என கமென்ட் அடிக்க, “மக்கள் வாக்களித்தது எம்.எல்.ஏ சீட்டுக்காக தானே தவிர, துணை முதல்வர் பதவிக்காக அல்ல’’ என ஷனம் ஷெட்டி பதிலளித்துள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version