இந்து மதம் வாழ்க்கை முறை: கோயிலுக்குச் செல்வது கட்டாயமில்லை – உச்சநீதிமன்றம்

இந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்றும், அதற்காகக் கோயில்களுக்குச் செல்வது கட்டாயமில்லை என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சபரிமலை கோயில் தொடர்பான வழக்கு விசாரணையின் 15வது நாளான இன்று, வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் மத சுதந்திரத்தின் வரம்புகள் குறித்து உச்ச நீதிமன்றம் ஆராய்ந்தது. அப்போது, அரசியலமைப்பின் 15, 16, 25 மற்றும் 26 ஆகிய பிரிவுகளின் முக்கியத்துவம் குறித்தும் நீதிபதிகள் விவாதித்தனர்.

பலர் கோயில்களுக்குச் செல்லாமலோ அல்லது வீட்டில் தனிப்பட்ட பூஜை அறை இல்லாமலோ இருக்கலாம். ஆனாலும், தங்களை இந்துக்களாகவே அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். ஏனெனில், இந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறையாகும். ஒரு இந்து, குறிப்பிட்ட சடங்குகளைச் செய்வதற்காகக் கட்டாயமாக கோயிலுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் தனது வாழ்க்கை முறையின் காரணமாக இந்துவாகவே இருக்கிறார் என்று நீதிபதி பி. வி. நாகரத்னா விளக்கினார்.

இந்தியத் தலைமை நீதிபதி கூறுகையில், பலருக்கு மதம் என்பது முறையான வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லாமல், 'தங்கள் குடிசைக்குள் ஒரு விளக்கை ஏற்றுவது' போன்ற எளிய செயல்களாக இருக்கலாம். மக்கள் தங்கள் நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதற்கு யாரும் தடையாக இருக்க முடியாது என்றும் நீதிபதி நாகரத்னா குறிப்பிட்டார். அரசியலமைப்பின் பல்வேறு பிரிவுகளைக் குழப்பினால் நாட்டில் மதமே இருக்காது என்றும் அவர் எச்சரித்தார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version