தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து, நகை வாடிக்கையாளர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நிபுணர்கள் தங்கம் விலை குறையும் என கணித்திருந்த நிலையில், அதற்கு நேர்மாறாக தொடர்ச்சியான விலை உயர்வை சந்தித்து வருகிறது. பெரும்பாலான நாட்களில் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தங்கம் விலை அதிகரித்து வருவது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
ஆகஸ்ட் 1ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ. 1,05,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், வெறும் 20 நாட்களுக்குள் சுமார் 15 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை ஏற்றத்திற்கு உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியிருப்பதும் தங்கத்தின் விலை உயர்வுக்கு ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.
தங்க நகை பிரியர்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸ்ட் 24) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் ஒரு சவரன் விலை ரூ.640 உயர்ந்து, ரூ.1,20,240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து, ரூ.15,030 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை மட்டுமல்லாமல், வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து, ரூ.275-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி விலை ரூ.5,000 அதிகரித்து, ரூ.2,75,000-க்கு விற்பனையாகிறது.
கடந்த ஐந்து நாட்களில் தங்கத்தின் விலை நிலவரம் பின்வருமாறு:
ஆகஸ்ட் 23: ஒரு கிராம் தங்கம் ரூ.14,950, ஒரு சவரன் ரூ.1,19,600.
ஆகஸ்ட் 22: ஒரு கிராம் தங்கம் ரூ.14,950, ஒரு சவரன் ரூ.1,19,600.
ஆகஸ்ட் 21: ஒரு கிராம் தங்கம் ரூ.14,850, ஒரு சவரன் ரூ.1,18,800.
ஆகஸ்ட் 20: ஒரு கிராம் தங்கம் ரூ.14,600, ஒரு சவரன் ரூ.1,16,800.
ஆகஸ்ட் 19: ஒரு கிராம் தங்கம் ரூ.14,400, ஒரு சவரன் ரூ.1,15,200.
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலை, நகை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. உலகப் பொருளாதார சூழல் மற்றும் உள்நாட்டு பண்டிகை கால தேவை ஆகியவற்றின் காரணமாக இந்த விலை உயர்வு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

