வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிப்பு: 3 பேர் கைது!

தமிழக சட்டசபை தேர்தல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது. இதில் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் சட்டவிரோதமாக வாக்களித்தது தற்போது அம்பலமாகியுள்ளது. சொந்த நாட்டுக்கு திரும்ப சென்னை விமான நிலையம் வந்தபோது, கைகளில் இருந்த தேர்தல் மை மூலம் இவர்கள் பிடிபட்டனர்.

குடியேற்றத்துறை அதிகாரிகளின் சோதனையில், கனடா குடியுரிமை பெற்ற ஜிதேந்திரநாத், ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற சந்திரசேகர ரகுபதி மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் என மூன்று பேர் சிக்கியுள்ளனர். விமான நிலைய அதிகாரிகள் அவர்களைக் கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற தேர்தலில், த.வெ.க. கட்சி வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களுக்குப் பதிலாக 108 இடங்களை மட்டுமே பெற்றது. இதனால், பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆளுநரின் உத்தரவின் பேரில் மே 13 அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 144 பேரும், எதிராக 22 பேரும் வாக்களித்தனர். தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இந்த சூழலில், வெளிநாட்டு குடிமக்கள் வாக்களித்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தேர்தல் நேர்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version