தவெக அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்: ஈ.பி.எஸ்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போதைய தவெக அரசு ஒரு ‘பொய்க்கால் குதிரை அரசு’ என்றும், அது எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்றும் அதிரடியாகக் கருத்து தெரிவித்தார்.

‘எதிர்க்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியும், பிற கட்சிகளின் தயவிலும் இந்த ஆட்சி ஓடிக்கொண்டிருக்கிறது. விளம்பர வெளிச்சத்தை மட்டுமே நம்பி நடத்தப்படும் இந்த அரசு, சில மாதங்களிலேயே தனது பலவீனத்தை உணரும்’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழகத்தின் புதிய முதலமைச்சருக்கு அரசியல் ஆலோசனையும் வழங்கிய ஈ.பி.எஸ்., ‘மக்களைக் கவர சினிமா பாணியில் கோட் சூட் போட்டோஷூட் நடத்துவதை விடுத்து, அடித்தட்டு மக்களின் கஷ்டங்களை நேரில் சென்று கேட்க வேண்டும். கள நிலவரங்களைப் புரிந்து கொள்ளாமல், ஏசி அறையில் அமர்ந்து கொண்டு செயல்படும் அரசாங்கம் நீண்ட காலம் நிலைக்காது’ என்று அறிவுறுத்தினார்.

மேலும், ‘கோட் சூட் போன்ற ஆடம்பர உடைகள் ஒரு முதலமைச்சருக்குத் தற்காலிகப் புகழைத் தரலாமே தவிர, மக்களின் நிரந்தரப் பேரன்பைப் பெற்றுத் தராது’ என்றும் அவர் கூறினார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version