திவ்யா சத்யராஜ்: సీఎం சாரின் அடியாளால் பெண்கள் பாதிப்பு – நீதி வேண்டும்!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் சி.ஜே.விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிராக, திமுகவின் நட்சத்திரப் பேச்சாளரும், நடிகருமான சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திவ்யா சத்யராஜ், "தற்போது தமிழ்நாட்டில் தங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை அடக்குவதற்கென்றே ஒரு தனிப்படை செயல்பட்டு வருகிறது. இது முதலமைச்சர் சாருக்கு என்று ஒரு தனி அடியாள் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. தவெக அரசு எனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தாமல், சமூக வலைதளங்களில் தங்களை விமர்சிப்பவர்களை 3 மணி நேரத்திற்குள் தேடிப் பிடித்துக் கைது செய்வது போன்ற விளம்பர அரசியலில் மட்டுமே வேகம் காட்டி வருகிறது. மக்களாட்சியில் விமர்சனங்களை எதிர்கொள்ளும் பக்குவம் அரசுக்கு வேண்டும். அதிகார பலத்தைப் பயன்படுத்தி மாற்றுக் கருத்துடையவர்களை அச்சுறுத்தக் கூடாது" என்று கூறினார்.

மேலும் அவர், "நாங்கள் ஆளும் கட்சி இல்லை என்றாலும், யாருடைய வாழ்க்கையையும் அழிக்கிற கட்சி கிடையாது. சோசியல் மீடியா Morphing.. CM Sir We Need Justice.. సీఎం சாரின் அடியாளால் நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் ஒரு மாஃபியா கம்பெனி நடத்துகிறார். உங்கள் அடியாள் சோசியல் மீடியா மாஃபியை வைத்து மிகவும் கேவலமாக பேசுவார். இந்த ஒரு மாதத்தில் த.வெ.க அரசு செய்த சாதனையாக நான் எதுவும் பார்க்கவில்லை. குற்றம் நடக்கும் போது ஆளுங்கட்சி அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது முக்கியம்" எனத் தெரிவித்தார்.

"நான் இனிமேல் சத்தமாகப் பேசப் போகிறேன். பெண்களுக்குத் தேவை Power. இத்தகைய மிரட்டல்களுக்கெல்லாம் திமுக அஞ்சாது. மக்களின் உண்மையான உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்" என்று திவ்யா சத்யராஜ் உறுதியளித்தார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version