தோனியால் சிக்கல்: சிஎஸ்கே புதிய பயிற்சியாளர் தேடலில் அஸ்வின் கருத்து

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய பயிற்சியாளர் தேர்வு குறித்து முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியில், தோனியின் நிலைப்பாடு பெரும் குழப்பத்தையும் சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணியின் 17 ஆண்டுகால தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய பயிற்சியாளரைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

இது தொடர்பாகப் பேசிய அஸ்வின், சிஎஸ்கே அணியில் பிளெமிங் தலைமைப் பயிற்சியாளராக இருந்தாலும், களத்தில் அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுக்கும் முதன்மை நபராக தோனிதான் எப்போதும் இருந்து வந்துள்ளார். பிளெமிங் அவருக்கு ஒரு துணையாக மட்டுமே செயல்பட்டு வந்துள்ளார். தற்போது புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்ய உள்ள நிலையில், தோனியே அந்தப் பொறுப்பை ஏற்கத் தயாராக இருக்கிறாரா என்பதில் சிஎஸ்கே நிர்வாகத்திற்குத் தெளிவு தேவைப்படுகிறது.

தோனி பயிற்சியாளராக வர சம்மதித்தால், அவரை விடச் சிறந்த நபர் சிஎஸ்கே-வுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால், அதற்கு அவர் விளையாடுவதிலிருந்து முழுமையாக ஓய்வு பெற வேண்டும். காயம் காரணமாக 2026 ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படும் தோனி, இன்னும் தனது ஓய்வு முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

மேலும், அஸ்வின் தனது கருத்தைத் தொடர்ந்தார். சிஎஸ்கே அணி, தோனிக்குத் துணையாக இருந்து, அவர் சொல்வதைக் கேட்டு வேலைகளைச் செய்யும் ஒருவரைக் கோச்சாகத் தேடுகிறதா? அல்லது தோனிக்கு இணையாகத் தனித்து நின்று முடிவெடுக்கும் திறன்கொண்ட ஒரு புதிய பயிற்சியாளரைத் தேடுகிறதா என்பதில் நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும்.

சிஎஸ்கே இனிவரும் காலங்களில் தோனியின் வழிகாட்டுதலில் மட்டுமே இயங்கும் அணியாக இருக்கப் போகிறதா அல்லது புதிய பயிற்சியாளர் தனது சொந்தக் கற்பனை மற்றும் திட்டங்களின்படி அணியை வழிநடத்தப் போகிறாரா என்பதை சிஎஸ்கே நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அஸ்வின் வலியுறுத்தினார்.

புதிய பயிற்சியாளர் தேர்வில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், தோனியின் எதிர்காலத் திட்டங்களையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று அஸ்வின் அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும், அஸ்வின் கூறுவது போல தோனி பயிற்சியாளராக வாய்ப்பு இல்லை என்றும், அவர் சிஎஸ்கே அணியின் ஆலோசகராக மட்டுமே செயல்பட இருப்பதாகவும் ஒரு தகவல் பரவலாக வலம் வருகிறது.

சிஎஸ்கே நிர்வாகம் ஒரு புதிய ட்விஸ்ட்டை வைத்துள்ளது. புதிய கோச் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் ஒரு குறிப்பிட்ட நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version