தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடம்பெறாது – சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜயை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் இன்று சந்தித்து முக்கிய கோரிக்கைகள் குறித்து விரிவாகப் பேசினார். இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், தமிழகத்தில் இனாம் நிலங்கள் தொடர்பாக நிலவி வரும் பிரச்சனைகள் குறித்தும், அதுதொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் தனது கட்சியின் நிலைப்பாட்டை விளக்கினார்.

'இனாம் நிலம்' என்றாலே அது கோவில் நிலம் என்ற தவறான புரிதல் மக்களிடையே நிலவுவதாகவும், இந்த இனாம் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய அனுமதித்த முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தனது கட்சி சார்பில் பாராட்டுகளைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் இனாம் நிலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதை வரவேற்பதாகவும், அதேபோல் தமிழகம் முழுவதும் இனாம் நிலங்களில் ஏற்பட்டுள்ள தடைகளை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், இனாம் நிலங்கள் தொடர்பான பிரச்சனைகளை ஆராய்வதற்கு ஒரு தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மேகமலை பகுதி மக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் பெ.சண்முகம் தெரிவித்தார். சேலம் மாநகராட்சியில் குடிநீர் விநியோகப் பணியை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 'பறைச்சேரி' என்ற கிராமத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

குடிதண்ணீர் உரிமையை தனியாருக்கு வழங்குவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் ஏற்காது என்றும், இந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுகுறித்து பேசிய அவர், 'தனியார் நிறுவனங்களுக்கு குடிநீர் விநியோக ஒப்பந்தம் வழங்குவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை' என்று தெரிவித்தார்.

பாஜகவின் செயல்பாடுகளையும், அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவதையும் ஒப்பிடக்கூடாது என்று கூறிய பெ.சண்முகம், பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்களை வளைத்து, கட்சிகளை உடைத்து தனது பலத்தை அதிகரித்துக் கொள்வதாகவும் குற்றம்சாட்டினார். ஆனால், இங்குள்ளவர்கள் ராஜினாமா செய்துவிட்டுத்தான் வேறு கட்சியில் இணைந்துள்ளனர் என்றும், இரண்டையும் ஒப்பிட முடியாது என்றும் அவர் விளக்கினார்.

குதிரை பேர விவகாரத்தில் மக்களுக்கு கோபம் வர வேண்டும் என்றும், இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்றும் அவர் கருத்து தெரிவித்தார். மேலும், தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறாது என்றும், இதுகுறித்து வீரபாண்டியன் எந்த அடிப்படையில் பேசினார் என்று கேட்பேன் என்றும் அவர் கூறினார். அமைச்சரவையில் சிபிஎம் கட்டாயம் பங்கேற்காது என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும், இது இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் சேர்ந்து எடுத்த முடிவு என்றும் பெ.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version