கல்லூரி பேராசிரியர்களுக்கு பணியிட மாறுதல்: இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பம்!

உயர்கல்வித் துறைக்கு உட்பட்ட அரசு கலை, அறிவியல், மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 2026-27ஆம் ஆண்டுக்கான பணியிடமாறுதல் பொது கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று (30.06.2026) முதல் ஜூலை 7, 2026 வரை இணையவழியில் பெறப்படும் என மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆசிரியர்கள், நூலகர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் தங்களது பணியிட மாறுதலுக்காக இந்த பொது கலந்தாய்வில் பங்கேற்கலாம். இதற்கான விண்ணப்பங்களை www.dcetransfer.in என்ற இணையதள முகவரியில் சமர்ப்பிக்கலாம்.

இந்த இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை கவனமாகப் பூர்த்தி செய்து, நீங்கள் விரும்பும் புதிய கல்லூரியைத் தேர்வு செய்து, பணியிட மாறுதலுக்கான காரணத்தையும் குறிப்பிட வேண்டும். பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்தால் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என்பதை பேராசிரியர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

சமீபத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது உயர்கல்வித்துறை சார்பாகவும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version