ஜெய்ப்பூரில் கரப்பான்பூச்சி கட்சி தலைவர் மீது மேடையில் தாக்குதல்

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒரு போராட்டத்தின் போது, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே மேடையிலேயே தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதரவாளர்கள் போல் நடித்து மேடை ஏறிய சிலர், திடீரென அபிஜீத் தீப்கேவின் கன்னத்தில் பலமுறை அறைந்துள்ளனர். இந்த தாக்குதலால் அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். NEET மற்றும் CBSE OSM பிரச்சனைகளுக்கு எதிராக நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version