கோ-ஆப்டெக்ஸ் ஷோரூம்கள் மூடல்: மக்கள் அதிர்ச்சி!

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம்

தமிழகத்தில் செயல்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் 10 ஷோரூம்களை மூட தமிழக அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெசவாளர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் பட்டுப் புடவைகள், கைத்தறி மற்றும் பல்வேறு ஜவுளி ரகங்களை விற்பனை செய்வதில் கோ-ஆப்டெக்ஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் கோ-ஆப்டெக்ஸ் ஷோரூம்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் பாரம்பரிய கைத்தறி ஆடைகளை வாங்குவதற்கு பொதுமக்கள் எளிதாக உள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் மொத்தம் 145 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில், விற்பனை குறைவு மற்றும் வர்த்தக ரீதியான காரணங்களைக் கருத்தில் கொண்டு, 10 விற்பனை நிலையங்களை மூடுவதற்கு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த மூடப்படும் ஷோரூம்களில், தமிழ்நாட்டில் 4, ஆந்திராவில் 5, மற்றும் மும்பையில் 1 என மொத்தம் 10 நிலையங்கள் அடங்கும்.

குறிப்பாக, சேலம், கடலூர், திருநெல்வேலி, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும், ஆந்திராவின் விஜயவாடா மற்றும் மும்பையிலும் அமைந்துள்ள இந்த ஷோரூம்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மண்டலத்தில் விற்பனை ஏற்கனவே ஜூலை 31 ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டுவிட்டது. கடலூர், திருநெல்வேலி மற்றும் மும்பையில் உள்ள ஷோரூம்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மட்டுமே விற்பனை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற மூடப்படும் ஷோரூம்களைப் பொறுத்தவரை, கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்குதல், சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுத்தல் மற்றும் கட்டிடங்களை உரியவர்களிடம் ஒப்படைத்தல் போன்ற பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான ஷோரூம்களின் கட்டிடங்களை இந்த மாத இறுதிக்குள் காலி செய்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் நடவடிக்கையால், மூடப்படும் ஷோரூம்களில் பணியாற்றும் ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களை வேறு ஷோரூம்களுக்கு பணியிட மாற்றம் செய்வார்களா அல்லது அவர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஊழியர்களிடையே எழுந்துள்ளது.

விற்பனை சரிவு காரணமாக கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் எடுத்துள்ள இந்த முடிவு, நெசவாளர்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதோடு, ஷோரூம்களில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தையும் எவ்வாறு பாதிக்கும் என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version