முதல்வர் விஜய் மதுவுடன் கார் ஓட்டினாரா? சர்ச்சை வீடியோ!

தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். கோயிலுக்குச் செல்லும்போதும், திரும்பும்போதும் அவரே காரை ஓட்டிச் சென்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின.

இந்த வீடியோக்களில், விஜய் ஓட்டிச் சென்ற காரின் உட்புறத்தில் இருந்த ஒரு கிளாஸில் பாதி அளவுக்கு ஒரு திரவம் நிரப்பப்பட்டிருந்தது. இதைக் கண்ட எதிர்க்கட்சியினர், 'அது மதுபானம் என்றும், முதலமைச்சர் மது அருந்திவிட்டு காரை ஓட்டுகிறார்' என்றும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர்.

ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சமூக ஊடக ஆதரவாளர்கள் இந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். 'அது மதுபானம் என்று எப்படி உறுதியாகக் கூற முடியும்? அது ஜூஸ் அல்லது தண்ணீராகக் கூட இருக்கலாம். அரசியல் உள்நோக்கத்துடன் எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கக் கூடாது' என்று அவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

முதலமைச்சர் விஜய் மது அருந்திவிட்டு கார் ஓட்டியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆதரவாளர்கள் இதை மறுத்து வரும் நிலையில், இந்த விவகாரம் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version