கரூரில் நினைவுச் சின்னம்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

கரூரில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

கரூரில் ‘நினைவுச் சின்னம்’ அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். கரூரில் உள்ள அட்லஸ் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், 'என் நெஞ்சில் குடியிருக்கும் கரூர் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம். ஒரு மனிதன் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் மனதளவில் காயங்கள், வலிகளை மறக்க முடியாது. நிறைய வலிகள், காயங்களை தாண்டித்தான் வந்தேன். கரூர் சம்பவம் தான் எனக்கு அதிக மனவலியை கொடுத்தது. என் அக்கா தங்கைகளையும், கள்ளங்கபடமற்ற குழந்தைகளையும் கரூரில் இழந்தேன். என் மனதின் ஆறாத காயம் கரூர் சம்பவம்' என்று உருக்கமாகப் பேசினார்.

மேலும் அவர் கூறுகையில், 'பெரம்பலூர் செல்லும் முன் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு செல்ல வேண்டாம் என போலீஸ் கூறியது. நாமக்கல்லில் இருந்து கரூர் வந்தபோது அங்கிருந்த காவல் துறை எங்களை அலர்ட் செய்யாதது ஏன்? நெடுஞ்சாலையில் இருந்து எங்களை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து விட்டது போலீஸ்தான். இப்படி நடந்தால் அப்படி செய்யுங்கள், அப்படி நடந்தால் இப்படி செய்யுங்கள் என சொல்லி பிரஷர் போட்டது யார்? போலீஸ் நினைத்திருந்தால் கரூர் நிகழ்ச்சியையே கேன்சல் பண்ணியிருக்கலாம். ஆனால், அந்த போலீஸே எங்களை ஹைவேஸ்ல இருந்து அந்த இடத்துக்கு கூட்டிட்டு போன நாடகம் இருக்கு பாருங்க. அதை நான் நம்பிட்டேன். அதனால்தான் கூட்டத்தில் போலீஸுக்கு நன்றி எல்லாம் சொன்னேன்' எனத் தெரிவித்தார்.

'வலியோடு இருந்த என்னை ஓடி ஒளிந்துவிட்டேன் என என்னைக் கூறுவதா? பணமா? ஜனமா? என என்னைக் கேட்டால், ஜனம்தான் முக்கியம் என நான் கூறுவேன். அதை விட எனக்கு வேறு எதுவும் முக்கியமில்லை. நம்ம எல்லோருக்கும் இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள்; ஆனால், அது மட்டும் போதாது மக்களே… எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு நிரந்தரமான பதிலடி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்' என்று அவர் கேட்டுக் கொண்டார்.

'தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பைசா லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அலுவலகங்களில் வேலை டக் டக் என நடக்கிறது. அரசு அலுவலகங்களில் மக்களுக்கு மரியாதை கிடைக்கிறது. ஊழல், லஞ்சம் இல்லை என மக்கள் கூறியதை கேட்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. எத்தனை கோடி ஊழல் நடந்திருக்கிறது என எங்களுக்கே தெரியவில்லை. தோண்ட தோண்ட ஊழல் வருகிறது. மக்கள் அமைத்துக் கொடுத்த அரசு மீது டிசைன் டிசைனாக குறை மட்டும் கூறுவார்கள். தீய சக்தியும், தீர்ந்த சக்தியும் 'பார்ட்டி பண்ட்' என்ற பெயரில் அனைத்து துறைகளிலும் கொள்ளை. சட்டசபையில் பார்ட்டி பண்ட் என கூறியதும் எடுத்தார்கள் பாருங்கள் ஒரு ஓட்டம். குற்றம் உள்ள நெஞ்சம் தான் குறுகுறுக்கும்' என அவர் விமர்சித்தார்.

'நமக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்த, நமக்கு எதிரான சதிய, சூழ்ச்சியை இனி வரும் தலைமுறைக்கு தெரியப்படுத்த கரூரில் தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்' என முதலமைச்சர் விஜய் அறிவித்தார். மேலும், 'ரீல் அல்ல ரியல் தாய்மாமன்' என குறிப்பிட்ட அவர், அறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்பு, கரூர் மக்களின் மனதில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது உரையில் குறிப்பிட்ட கரூர் சம்பவம், அவரது மனதிற்கு பெரும் காயத்தை ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளார். இந்த சம்பவத்தின் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என அவர் அறிவித்துள்ளது, அப்பகுதி மக்களிடையே ஒருவித எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

தவெக ஆட்சியின் கீழ் லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத நிர்வாகம் நடைபெறுவதாகவும், அரசு அலுவலகங்களில் பணிகள் விரைவாகவும், மக்களுக்கு மரியாதையுடனும் செய்யப்படுவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். இந்த ஆட்சி மாற்றத்தால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், கடந்த காலங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து அவர் கடுமையாகச் சாடினார்.

2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை, அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட காயங்களுக்கும், வலிகளுக்கும் நிரந்தரமான தீர்வு காண வேண்டும் என்ற அவரது எண்ணம், மக்கள் மத்தியில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம் குறித்த அறிவிப்பும், மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version