தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தனிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள செந்தில்குமார், லட்சுமி பிரியா, அண்ணாதுரை, விஷ்ணு ஆகியோருக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்கள், துறை சார்ந்த சந்திப்புகள், திட்டங்களின் செயலாக்கம் மற்றும் அரசின் செயல்பாடுகளில் சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் செய்யப்பட்டுள்ளன. இது அரசின் நிர்வாக திறனை மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செந்தில்குமார் அவர்களுக்கு நிதித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், பொதுப்பணித்துறை, மற்றும் விஜிலன்ஸ் ஆகிய துறைகளின் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த துறைகள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், பொதுமக்களின் அன்றாட தேவைகளுக்கும் மிக முக்கியமானவையாகும்.
லட்சுமி பிரியாவுக்கு சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, பள்ளி கல்வித்துறை, மற்றும் உயர்கல்வித்துறை, வனத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர் இந்த துறைகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணாதுரைக்கு இயற்கை வளங்கள், நீர்வளத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை, போக்குவரத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. விஷ்ணுவுக்கு வணிக வரி மற்றும் பதிவுத்துறை, சுற்றுலாத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை உள்ளிட்டவை ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நியமனங்கள் மூலம் அரசின் திட்டங்கள் விரைவாகவும் திறம்படவும் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

