திருவொற்றியூரில் கள்ளச்சாராய விற்பனை: ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

திருவொற்றியூர் தேரடி அருகே உள்ள மதுபான கடையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்பட்ட காட்சி அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கள்ளச்சந்தை மது விற்பனையை தடுக்க தவறிய திருவொற்றியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளர் மோகன் தாஸ் மீது சென்னை காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் விளைவாக, ஆய்வாளர் மோகன் தாஸ் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவு காவல் துறையினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுபான கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் தடுக்க காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி, சட்டவிரோத மதுபான விற்பனையை கட்டுப்படுத்த காவல் துறை தீவிர நடவடிக்கை எடுக்கும் என நம்பப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version