சார்தாம் யாத்திரையில் 165 பக்தர்கள் உயிரிழப்பு: அதிர்ச்சியில் உத்தரகாண்ட்

உலகப் புகழ்பெற்ற சார்தாம் யாத்திரையில் வரலாறு காணாத வகையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், உயிரிழப்புகளும் கணிசமாக உயர்ந்துள்ளன. உத்தரகாண்டில் ஏப்ரல் 19 அன்று கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி நுழைவாயில்கள் திறக்கப்பட்டதிலிருந்து, கடந்த 49 நாட்களில் மட்டும் 165 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மாரடைப்பு போன்ற உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்த யாத்திரையின்போது ஒரு நாளைக்கு சராசரியாக மூன்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். கடினமான மலைப்பகுதி என்பதால், அதிக உயரமும், தட்பவெப்ப நிலையும் பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவும், இதுவே மாரடைப்புக்கு முக்கிய காரணமாக அமைவதாகவும் கூறப்படுகிறது. இதுவரை கேதார்நாத் வழித்தடத்தில் 80 பேரும், பத்ரிநாத் வழித்தடத்தில் 48 பேரும், யமுனோத்ரி வழித்தடத்தில் 21 பேரும், கங்கோத்ரி வழித்தடத்தில் 16 பேரும் உயிரிழந்துள்ளனர்.

நவம்பர் 13 வரை தொடர திட்டமிடப்பட்டுள்ள இந்த யாத்திரையில், இன்னும் ஐந்து மாத காலத்திற்கு பக்தர்கள் வருகை இருக்கும் என்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சார்தாம் யாத்திரை என்பது இந்துக்களின் புனித யாத்திரைகளில் ஒன்றாகும். இது உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய இரண்டு முக்கிய தலங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த யாத்திரையில் கலந்துகொள்கின்றனர். இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version