தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியை ஒரு வருடம் கவனிப்போம் என்றும், தவறுகள் செய்தால் ஆட்சியே கவிழும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தனது அமைப்பை அரசியலாக மாற்றி மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய ஆட்சியில் பல ஆண்டுகள் கழித்து ஒரு புரட்சி நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, இந்த அரசுக்கு ஒரு வருடம் அவகாசம் கொடுப்போம் என்றும், அவர்கள் ஒழுங்காக ஆட்சி செய்யவில்லை என்றால் அதை கவிழ்ப்போம் என்றும் கூறினார். மேலும், அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவோம் என்றும், திருத்திக்கொள்ளும் போது பாராட்டுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக அரசு சேமித்து வைத்துள்ள 15,000 கோடி ரூபாயை நீர் மேலாண்மை, கல்வி, கிராமப்புற வளர்ச்சி ஆகிய மூன்று துறைகளிலும் தலா 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது தங்கள் கோரிக்கை என அண்ணாமலை வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலர் தன்னைச் சந்தித்து, அரசியலைச் சரியாகச் செய்யவில்லை என்று கூறுவதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார். தற்போதைய எதிர்க்கட்சிகளின் அரசியல் என்பது, எப்படியாவது ஆளுங்கட்சியைக் கவிழ்த்து ஆட்சிக்கு வரவேண்டும் என்பதாகவே இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
'ஆபரேஷன் மேகாலயா' என்ற பெயரில் 10 சட்டமன்ற உறுப்பினர்களைப் பிடித்து வைத்து, அவர்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகளின் அரசியல் போக்கை அவர் சுட்டிக்காட்டினார். தவறாக ஆட்சி செய்தால் ஆட்சியே கவிழும் என்றும், இந்த அரசுக்கு ஒரு வருடம் நேரம் கொடுங்கள் என்றும், ஏன் காலில் வெந்நீரை ஊற்றியது போல சுற்றிக்கொண்டே இருக்கிறீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அடிப்படை அரசியலையே மாற்றுவதற்காக வந்துள்ளதாகவும், சேவை மனப்பான்மையோடு வருபவர்களால் மட்டுமே அடிப்படை அரசியலை மாற்ற முடியும் என்றும் அண்ணாமலை தனது உரையில் குறிப்பிட்டார்.

