தமிழகத்தின் அரசியல் களம் அநாகரிகமான பேச்சுகளால் தொடர்ந்து பாதிக்கப்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என வீ தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுகவின் உதயநிதியின் கருத்துக்களைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, முதல்வர் விஜயின் தாய் குறித்து கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றும், கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், கொள்கைகளை விமர்சிக்கலாம், ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகி போன அரசியல் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தாயாரை இழிவுபடுத்துவது நாகரிகமற்ற செயல் என்றும், இது போன்ற பேச்சுகள் அரசியல் களத்தை அநாகரிகமாக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

