தாயை இழிவுபடுத்திய நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்

வீ தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை

தமிழகத்தின் அரசியல் களம் அநாகரிகமான பேச்சுகளால் தொடர்ந்து பாதிக்கப்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என வீ தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திமுகவின் உதயநிதியின் கருத்துக்களைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, முதல்வர் விஜயின் தாய் குறித்து கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றும், கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், கொள்கைகளை விமர்சிக்கலாம், ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகி போன அரசியல் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தாயாரை இழிவுபடுத்துவது நாகரிகமற்ற செயல் என்றும், இது போன்ற பேச்சுகள் அரசியல் களத்தை அநாகரிகமாக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version