அன்னாசி பழத்தை தொடர்ந்து 40 நாட்கள் உட்கொண்டால் நம் உடலில் பல அற்புதங்கள் நிகழும். பொதுவாக, அன்னாசி பழத்தில் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த பழத்தை உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.
அன்னாசி பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. மேலும், வைட்டமின் ஏ, பி, சி போன்ற சத்துக்களும் இதில் நிறைந்துள்ளன. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைவதோடு, தொப்பையும் குறைக்க உதவும்.
ஒரு பக்கத் தலைவலி பிரச்சனை உள்ளவர்கள், அன்னாசி பழத்துடன் தேன் கலந்து ஜூஸ் செய்து தொடர்ந்து 40 நாட்கள் குடித்து வந்தால், தலைவலி குணமாகும். இதுமட்டுமின்றி, இருபக்கத் தலைவலி, அனைத்து விதமான கண் நோய்கள், காது நோய்கள், பல் நோய்கள், தொண்டை சம்பந்தப்பட்ட நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைபாடு போன்ற பிரச்சனைகளுக்கும் அன்னாசி பழம் நிவாரணம் அளிக்கும்.
அன்னாசி பழத்தை உட்கொள்வதால் முகம் பொலிவு பெறும். இதில் உள்ள நார்ச் சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை ஜீரண சக்தியை அதிகரிக்கும். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அன்னாசி பழச்சாற்றை அருந்தினால் விரைவில் குணமடையலாம்.
இரத்த இழப்பால் பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி பழச்சாறு ஒரு சிறந்த டானிக்காக செயல்படும். பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் போன்ற பிரச்சனைகளை நீக்குவதிலும் அன்னாசி பழம் ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது.
மேலும், அன்னாசி பழம் இரத்தத்தை சுத்தம் செய்வதிலும், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதிலும், மலக்குடலைச் சுத்தப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. தொடர்ந்து 40 நாட்கள் இப்பழத்தை உண்டால், உடலில் ஆரோக்கியமும் பளபளப்பும் ஏற்படும்.
உடலில் ஏற்படும் வலியைத் தீர்க்கும் ஆற்றல் கொண்ட அன்னாசி பழம், பித்தத்தைக் குறைக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. இது இதயம் தொடர்பான நோய்களில் இருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது. கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கவும் அன்னாசி பழம் உதவுகிறது.

