அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தவெகவில் இணைந்தார்

அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்த இசக்கி சுப்பையா, தனது பதவியை இன்று ராஜினாமா செய்துவிட்டு, அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். சட்டப் பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவான நிலையில், பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்தனர். அவர்களில் இசக்கி சுப்பையாவும் ஒருவர்.

நேற்று மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இந்த வரிசையில் இன்று காலையில் இசக்கி சுப்பையாவும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பனையூரில் உள்ள அலுவலகத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் இசக்கி சுப்பையா தவெகவில் இணைந்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், '2021 முதல் எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்தேன். அப்போது பெரிய அளவில் நலத்திட்டங்களை கொண்டு வர முடியவில்லை. இப்போது என் அம்பாசமுத்திரம் தொகுதிக்கு பல நலத்திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தவெகவில் இணைந்துள்ளேன்' என்று தெரிவித்தார்.

தவெக வீழ்த்தும் அதிமுக விக்கெட்டுகள்… விஜய்யின் ‘பாய்ச்சல்’ அரசியல் இலக்கு என்ன? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இது அதிமுகவில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version