அதிமுகவில் பிளவு? இபிஎஸ் நடவடிக்கைகளுக்கு எஸ்.பி.வேலுமணி கண்டனம்!

அதிமுகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், இபிஎஸ் தரப்புக்கு எதிராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, இபிஎஸ் எடுத்திருக்கும் பல நடவடிக்கைகள் செல்லாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

"இபிஎஸ் உட்பட 22 சட்டமன்ற உறுப்பினர்கள் கொறடாவின் உத்தரவை மதிக்கவில்லை. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று எஸ்.பி.வேலுமணி கூறினார். பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கு ஆதரவாக இருக்கிறார்களோ, அவர்களே உண்மையான விதிகளின்படி செயல்படுபவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"தற்போது இபிஎஸ் எடுக்கும் எந்த முடிவும் செல்லாது என்பதை மக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். பொதுக்குழுவைக் கூட்டி, கட்சியின் தோல்விக்கான காரணங்களை விரிவாக ஆராய வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், கடந்த 11-ஆம் தேதி யார் எந்தப் பொறுப்பில் இருந்தார்களோ, அவர்களே அதே பொறுப்புகளில் தொடர்வார்கள் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

"கருத்து வேறுபாடு ஏற்பட்டால் யாரையும் கட்சியிலிருந்து நீக்க முடியாது என்பதே சட்டமாகும். பொதுச்செயலாளராக இருந்தவர் எடுத்த நீக்க உத்தரவு செல்லாது. நீக்கியதாகக் கூறியவர்கள் அதே பதவிகளில் தொடர்வார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் அமைப்புக்கும், கட்சி அமைப்புக்கும் தனித்தனி விதிகள் உள்ளன" என்றும் எஸ்.பி.வேலுமணி விளக்கினார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version