ரசிகர்களை ஏமாற்றினால் வருத்தம் – சாரா அலிகான் மனம் திறந்தார்!

சென்னை: பாலிவுட் நடிகை சாரா அலிகான், சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக பரவும் விமர்சனங்கள் மற்றும் கிண்டல்களைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில், 'சமூக வலைதள விமர்சனங்கள் உங்கள் மனநலனை பாதிக்கிறதா?' என்ற கேள்விக்கு பதிலளித்த சாரா, 'நிச்சயமாகப் பாதிக்கின்றன. ஒரு கலைஞராக நான் செய்யும் அனைத்தும் என் ரசிகர்களுக்காகத்தான். அவர்களை நான் ஏமாற்றமடையச் செய்யும்போது எனக்குள் மிகுந்த வருத்தம் ஏற்படுகிறது' என உருக்கமாகக் கூறினார்.

திரையுலகில் ஆரம்ப காலத்தில் என் முழு கவனமும் ரசிகர்களிடம் மட்டுமே இருந்தது. ஆனால், இந்த பயணத்தில் சில காலம் கழித்து, நமக்காகவும் உழைக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன். இதை நான் தாமதமாகக் கற்றுக்கொண்டேன். நாம் செய்யும் வேலையை ரசித்து, முழுமையாகச் செய்தால் ஒருவித நிம்மதி கிடைக்கும். 'என்னால் முடிந்ததைச் செய்துவிட்டேன், இனி எல்லாம் அவன் கையில்' என்று நினைக்கும்போது, தேவையற்ற மன உளைச்சல் ஏற்படுவதில்லை' என்று அவர் விளக்கினார்.

சாரா அலிகான், ஆயுஷ்மான் குரானா, ரகுல் பிரீத் சிங் ஆகியோருடன் 'பதி பத்னி அவுர் வோ தோ' என்ற காதல் நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த டிசம்பர் 15 அன்று திரையரங்குகளில் வெளியானது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version