நடிகர் ரவி மோகன் வீட்டில் பணிப்பெண்கள் சிறைபிடிப்பு – போலீஸ் விசாரணை

சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில், பணிப்பெண்களை நடிகர் ரவி மோகன் சிறைபிடித்து வைத்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நீலாங்கரை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், நடிகர் ரவி மோகனின் வீட்டில் இரண்டு பணிப்பெண்கள் மற்றும் அவரது மகன் ஆகியோர் சிறைபிடிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இது தொடர்பாக ரவி மோகன் தரப்பிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, வீட்டில் பணிப்பெண்கள் திருட்டில் ஈடுபட்டதாக அவர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து, சட்டவிரோதமாக யாரையும் விசாரிக்கக் கூடாது என்றும், திருட்டு சம்பவம் நடந்திருந்தால் அதுகுறித்து முறையாக காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் என்றும் நடிகர் ரவி மோகன் தரப்பினருக்கு போலீசார் அறிவுரை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணிப்பெண்களை சிறைபிடித்து வைத்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version