ஆவினில் ₹20-க்கு புதிய மில்க் ரஸ்க் அறிமுகம்

புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆவின் மில்க் ரஸ்க்

தமிழக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனமான ஆவின், தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய முயற்சியாக, ₹20 விலையில் 'மில்க் ரஸ்க்'-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

முன்னதாக, ஆவின் நிறுவனம் பால், வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா, மைசூர் பா, மிக்சர், பட்டர் முறுக்கு, மில்க் பிஸ்கெட், குக்கீஸ் போன்ற 100-க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வந்தது. இதன் மூலம் ஆவினுக்கு மாதந்தோறும் சுமார் ₹100 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வந்தது.

ஆனால், சமீப காலமாக பல பொருட்களின் உற்பத்தி படிப்படியாக நிறுத்தப்பட்டதால், ஆவினுக்கு ₹120 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சரிவிலிருந்து மீண்டு வருவதற்கான தீவிர முயற்சிகளில் ஆவின் தற்போது இறங்கியுள்ளது.

அந்த வகையில், நுகர்வோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், புதிய 'மில்க் ரஸ்க்' விற்பனையை ஆவின் நிறுவனம் தொடங்கியுள்ளது. 100 கிராம் எடை கொண்ட இந்த 'ஆவின் ரஸ்க்', ₹20 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சந்தையில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்கள், சுமார் 80 கிராம் எடையுள்ள ரஸ்க்கை ₹10-க்கு விற்பனை செய்து வரும் நிலையில், ஆவின் நிறுவனம் 20 கிராம் கூடுதலாகச் சேர்த்து, ₹20-க்கு இந்த ரஸ்க்கை விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய 'மில்க் ரஸ்க்'-க்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, எதிர்காலத்தில் ஏலக்காய், முந்திரி, ஓட்ஸ் போன்ற பல்வேறு சுவைகளில் ரஸ்க் வகைகளை அறிமுகப்படுத்தவும் ஆவின் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ஆவினின் வருவாயை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version