தெலுங்கானா மாநிலத்தின் நகரியைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய்யின் மகன் பகீரத் (25 வயது) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஒரு 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஐதராபாத் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு எதிராக பகீரத் தரப்பில் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி வழக்கு தொடரப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதனிடையே, அவர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. மேலும், அவரை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த சூழ்நிலையில், மத்திய அமைச்சரின் மகனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தியிருந்தார். தனது மகன் எந்த தவறும் செய்யவில்லை என்றாலும், சட்டத்தின் முன் நிறுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, பகீரத் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
மத்திய அமைச்சர் ஒருவரின் மகன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், பொதுமத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.