MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: டாஸ்மாக் பார்கள் மூடல்: உரிமையாளர்கள், ஊழியர்கள் சென்னையில் போராட்டம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > டாஸ்மாக் பார்கள் மூடல்: உரிமையாளர்கள், ஊழியர்கள் சென்னையில் போராட்டம்!
தமிழ்நாடு

டாஸ்மாக் பார்கள் மூடல்: உரிமையாளர்கள், ஊழியர்கள் சென்னையில் போராட்டம்!

Admin
Last updated: May 15, 2026 6:59 pm
Admin
Share
SHARE

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகள், கோவில்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, அடுத்த 2 வாரங்களுக்குள் இந்த கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த திடீர் உத்தரவால், டாஸ்மாக் பார்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களை நம்பி வாழும் குடும்பத்தினர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மாற்று வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் தங்களது நிலை குறித்து டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் வேதனையுடன் தெரிவித்துள்ளது. இந்த பாதிப்புகளை கண்டித்தும், தங்களது வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தியும், தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் டாஸ்மாக் பார்கள் இன்று மூடப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பரசன் தலைமையில், சங்க நிர்வாகிகள் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் பொது மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, டாஸ்மாக் அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், டாஸ்மாக் கடைகளை அமைப்பதற்கான இடங்கள் மற்றும் வசதிகளை பார் உரிமையாளர்களே தங்களது சொந்த செலவில், விதிமுறைகளுக்கு உட்பட்டு அமைத்துள்ளதாகவும், இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், வங்கி மற்றும் தனிநபர் கடன்கள் பெற்று, மாதந்தோறும் EMI தவணைகளை செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பார் நடத்தி வரும் நிலையில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள 717 கடைகளை 2 வாரங்களுக்குள் மூட உத்தரவிட்டிருப்பது தங்களை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் தள்ளும் என்றும், இது இயற்கை நீதிக்கு எதிரானது என்றும் மனுவில் தெரிவித்துள்ளனர். எனவே, டாஸ்மாக் கடைகளை மூட போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், தொழிலாளர் பாதிப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மூடப்பட்ட கடைகளில் விற்பனையாகும் மது பாட்டில்களை அருகில் உள்ள கடைகளில் மொத்தமாக சேர்ப்பதால், அங்கு கூட்டம் அதிகரித்து, பொது வெளியில் மது அருந்தும் பழக்கம் அதிகரிக்கிறது என்றும், எனவே, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடங்களில் மூடப்பட்ட கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். தீர்வு காணப்படாத பட்சத்தில், தொடர்ந்து பார்களை மூட திட்டமிட்டுள்ளதாக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai ProtestLiquor shopsTamil Naduடாஸ்மாக்தமிழக செய்திகள்மதுபான கடைகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கேரளாவில் UDF பதவியேற்பு: LDF பங்கேற்பு – சிபிஐ மாநிலச் செயலாளர் அறிவிப்பு!
Next Article கோலி vs வைபவ்: ஐபிஎல் முதல் 18 போட்டிகளில் அசத்தியது யார்?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குழந்தையின் உயிரை பணயம் வைத்த தந்தை: கடும் கண்டனங்கள் குவிதல்

கர்நாடகாவில் குழந்தையின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி, ஆபத்தான முறையில் பயணம் செய்த தந்தையின் செயலுக்கு…

June 29, 2026

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு: மூன்றாவது மொழி தேர்வு கட்டாயமில்லை

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியில்…

June 29, 2026

ஆந்திராவில் 2 பல்கலைக்கழக விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர பிரதேச…

June 29, 2026

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம்…

June 29, 2026

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

June 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

3 மாவட்டங்களில் இன்று காலை மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் இதில்…

1 Min Read
தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடி சரிவு! இன்றைய நிலவரம் என்ன?

மத்திய அரசின் இறக்குமதி வரி உயர்வால் உயர்ந்த தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600 ஆக விற்பனையாகிறது. வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

சினிமா கவர்ச்சி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது: ஸ்டாலின்

சினிமா கவர்ச்சியால் அமைந்த தற்போதைய ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என்றும், விரைவில் மக்கள் திமுகவை மீண்டும் ஏற்பார்கள் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

3 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்தது ஜனநாயகத்துக்கு எதிரானது – அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த 3 எம்.எல்.ஏக்களின் செயல் ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும், இது சந்தர்ப்பவாத அரசியல் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?