MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மதுரையில் காவல்துறை தாக்குதலால் பூசாரி உயிரிழப்பு? பரபரப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மதுரையில் காவல்துறை தாக்குதலால் பூசாரி உயிரிழப்பு? பரபரப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மதுரையில் காவல்துறை தாக்குதலால் பூசாரி உயிரிழப்பு? பரபரப்பு

தமிழ்நாடு

மதுரையில் காவல்துறை தாக்குதலால் பூசாரி உயிரிழப்பு? பரபரப்பு

Fernandez
Last updated: ஆகஸ்ட் 18, 2026 6:59 மணி
Fernandez
Share
மதுரை சிந்தாமணி காவல் நிலையம் முன்பு செய்தியாளர்களை சந்திக்கும் பூசாரி பரமசிவத்தின் குடும்பத்தினர்.
மதுரை சிந்தாமணி காவல் நிலையம் முன்பு செய்தியாளர்களை சந்தித்த பூசாரி பரமசிவத்தின் குடும்பத்தினர்.
SHARE

மதுரை சிந்தாமணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோயில் பூசாரி பரமசிவம், காவல்துறையினரின் கொடூரத் தாக்குதலால் உயிரிழந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த பரமசிவம், அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட வாகன நிறுத்துமிடம் தொடர்பான பிரச்சனை தொடர்பாக கடந்த மாதம் 19ஆம் தேதி விசாரணைக்காக சிந்தாமணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, காவல்துறையினர் அவரை மிகக் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, பரமசிவத்திற்கு வாந்தி, மயக்கம் மற்றும் கடுமையான தலைவலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறப்பதற்கு சற்று முன்னர், காவல்துறையினர் தம்மை கொடூரமாகத் தாக்கியதே தனது உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடுவதற்கு காரணம் என்று பரமசிவம் ஒரு காணொலியில் பதிவு செய்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்ட பரமசிவம், ஜூலை 26ஆம் தேதி அன்று வீட்டில் கீழே விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தியும் அதனை மறுத்து வெளியேறிய நிலையில், அவரது உடல்நிலை தீவிரமாகப் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி உயிரிழந்ததாகவும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், காவல்துறையினர் தாக்கியதால்தான் தனது கணவர் உயிரிழந்ததாக பூசாரி பரமசிவத்தின் மனைவியும், மகனும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்நிலைய சிசிடிவி காட்சிகளும் இல்லை என்று காவல்துறையினர் கூறுவதாகவும் பூசாரியின் மனைவி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இதனிடையே, பூசாரி பரமசிவத்தின் உடலை வாங்க குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததால், மதுரையில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MaduraiParamasivampolicePriest Deathகாவல்துறைசிந்தாமணி காவல் நிலையம்பரமசிவம்பூசாரி உயிரிழப்புமதுரை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250 வங்கி அதிகாரி வேலைகள்: டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Next Article ஹானர் பேட் 20 ப்ரோ பேப்பர்லைக் எடிஷன் டேப்லெட் 6.29 மி.மீ தடிமன், 10100 எம்ஏஎச் பேட்டரி: ஹானர் பேட் 20 ப்ரோ அறிமுகம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேசும் காயமடைந்த நபர்

துப்பாக்கிச்சூடு வழக்கில் முக்கிய சாட்சி: உயிருக்கு ஆபத்து என பரபரப்பு

துப்பாக்கிச்சூடு வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பதாகவும், கர்நாடக வனத்துறையினரால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும்…

ஆகஸ்ட் 18, 2026

அருணாச்சல பிரதேசத்தில் கனமழையால் பேரழிவு: 12 பேர் உயிரிழப்பு

அருணாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழையால் 28 மாவட்டங்கள்…

ஆகஸ்ட் 18, 2026

முதல் மனைவியை கைவிட்ட அரசு ஊழியர்களுக்கு அசாம் அரசு எச்சரிக்கை

முதல் திருமணத்தில் இருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல்…

ஆகஸ்ட் 18, 2026

மத்தியப்பிரதேசத்தில் பயங்கரம்: லாரி மோதி 8 பேர் பலி, 32 காயம்

மத்தியப்பிரதேசத்தில் விவசாயத் தொழிலாளர்கள் சென்ற டெம்போ மீது…

ஆகஸ்ட் 18, 2026

கல்வி அமைச்சர்கள் ஏன் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்கிறார்கள்? – அபிஜீத் தீப்கே கேள்வி

கல்வி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஏன் தங்கள்…

ஆகஸ்ட் 18, 2026

You Might Also Like

தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐ.ஏ.எஸ்
தமிழ்நாடு

தலைமைச் செயலாளர் சாய்குமார்: 6 மாத பணி நீட்டிப்பு!

தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐ.ஏ.எஸ் அவர்களின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த அவரது பதவிக்காலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி…

2 Min Read
தீயில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிகிச்சை பெறும் காட்சி
தமிழ்நாடு

செலவுக்கு பணம் தர மறுத்ததால் கொடூரம்: மனைவி, மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தொழிலாளி

செலவுக்கு பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த தொழிலாளி, மனைவி மற்றும் 2 மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூர சம்பவம். பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.

2 Min Read
தமிழ்நாடு

திருநெல்வேலி: வள்ளியூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் கோட்டையில் நாளை மறுநாள் (மே 20, 2026) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி…

1 Min Read
கரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி பெயரில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய போஸ்டர்
தமிழ்நாடு

விஜய், ஜோதிமணி குறித்த போஸ்டரால் கரூரில் சர்ச்சை

கரூர்: முதல்வர் விஜயை 'தேவதூதர்' என்றும், எம்.பி. ஜோதிமணியை 'மாரியம்மன்' என்றும் சித்தரித்த போஸ்டரால் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து, சர்ச்சை எழுந்துள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?