ரஷியா – உக்ரைன் இடையேயான போர் நீண்ட காலமாக நீடித்து வரும் நிலையில், தற்போது உக்ரைன் மீது ரஷியா வரலாறு காணாத மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. தலைநகர் கீவ், மேற்கு நகரமான லிவிவ், ஒடெசா துறைமுகம் என உக்ரைனின் 20 முக்கிய இடங்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
சுமார் 800 டிரோன்களை ஒரே நேரத்தில் ஏவி ரஷியா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைனின் வான்பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டாலும், பல டிரோன்களை தடுக்க முடியவில்லை. இதனால் டிரோன்கள் உக்ரைனுக்குள் விழுந்து வெடித்தன. இந்த தொடர் தாக்குதல்கள் பல மணி நேரம் நீடித்தன.
இந்த கொடூரமான தாக்குதல்களில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். ரஷியா நடத்திய டிரோன் தாக்குதல்களில் இதுவே மிக நீண்ட தாக்குதல் என கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை கொண்டு வர முயற்சித்தாலும், போர் தொடர்ந்து நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ரஷியாவின் இந்த திடீர் மற்றும் மிகப்பாரிய டிரோன் தாக்குதல் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி என்ன, அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. MDTV 24×7 தொடர்ந்து இந்த செய்திகளை உங்களுக்கு வழங்கும்.