இந்தியாவின் நவீன ஓவிய உலகின் முன்னோடியாகப் போற்றப்படும் அம்ரிதா ஷெர்கில் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ஒன்று உருவாகிறது. ஹங்கேரியில் பிறந்த அம்ரிதா, இந்தியக் கலைகளால் கவரப்பட்டு, சாதாரண மக்களின் வாழ்வியலையும், குறிப்பாக கிராமப்புற இந்தியப் பெண்களின் மனநிலையையும் தனது ஓவியங்களில் தத்ரூபமாகப் படைத்தவர்.
இந்த உயரிய கலைஞர், தனது 28வது வயதில் 1941 ஆம் ஆண்டு காலமானார். அவரது வாழ்க்கை இப்போது வெள்ளித்திரையில் உயிர்பெறுகிறது. 'சலாம் பாம்பே', 'மான்சூன் வெட்டிங்' போன்ற வெற்றிப் படங்களைத் தந்த மீரா நாயர் இந்தப் படத்தை இயக்குகிறார். இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான செய்தியாகும்.
இந்த பயோபிக் படத்தில் அம்ரிதா ஷெர்கில் கதாபாத்திரத்தில் நடிக்க, நூற்றுக்கும் மேற்பட்டோரை ஆடிஷன் செய்ததில், அஞ்சலி சிவராமன் அம்ரிதாவின் தோற்றத்திற்குப் பொருத்தமாக இருந்ததால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அஞ்சலி சிவராமன் தமிழில் 'பேட் கேர்ள்' படத்திலும், நெட்ஃப்ளிக்ஸில் வெளியான 'கிளாஸ்' தொடரிலும் நடித்துள்ளார்.
பிரியங்கா சோப்ரா, ஜெய் தீப், ஜிம் சரப் போன்ற பிரபலங்களும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ஹங்கேரி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தப் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.