MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: விடுதி உரிமையாளர் மூலம் அம்பலம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: விடுதி உரிமையாளர் மூலம் அம்பலம்

இந்தியா

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: விடுதி உரிமையாளர் மூலம் அம்பலம்

Admin
Last updated: மே 13, 2026 4:41 மணி
Admin
Share
SHARE

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், ராஜஸ்தானில் உள்ள ஒரு விடுதி உரிமையாளரின் விழிப்புணர்வு முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, விடுதி உரிமையாளர் மற்றும் ஒரு மருத்துவர் உட்பட பலர் காவல்துறையினரின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவர், கேரளாவில் மருத்துவப் படிப்பின் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவரது தந்தை, ராஜஸ்தானில் ஒரு விடுதி நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் 2ஆம் தேதி இரவு சுமார் 11 மணியளவில், அந்த மாணவருக்கு ராஜஸ்தானில் உள்ள அவரது நண்பர் ஒருவர், நீட் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் ஒன்றை வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார். உடனடியாக, அந்த மாணவர் தனது தந்தைக்கு அந்த மாதிரி வினாத்தாளை அனுப்பி, விடுதியில் தங்கி நீட் தேர்வுக்காகப் படிக்கும் மாணவர்களுக்கு இதனைக் கொடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

விடுதி உரிமையாளர், தனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியருக்கு மே 3ஆம் தேதி காலை அந்த மாதிரி வினாத்தாளை அனுப்பியுள்ளார். அந்த ஆசிரியர்கள் மாதிரி வினாத்தாளைப் பரிசோதித்தபோது, அதில் கேட்கப்பட்டிருந்த 135 கேள்விகள், உண்மையான நீட் தேர்வு வினாத்தாளில் உள்ள கேள்விகளோடு அப்படியே பொருந்திப் போவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக சிகார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஜெய்ப்பூரைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மகாராஷ்டிராவில் ஆயுர்வேதம் பயின்று வரும் சுபம் கயிர்னர் என்ற மாணவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம், நீட் தேர்வு முறைகேடுகள் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், தேர்வு முறையின் நம்பகத்தன்மை குறித்தும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அங்கீகாரம் பட டிரெய்லர் வெளியீடு – ஜூன் மாதம் திரையரங்குகளில்!
Next Article அல்லு அர்ஜுன் – லோகேஷ் படத்தில் பூஜா ஹெக்டே? ஹாட்ரிக் ஜோடி காம்போ!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் சட்டமன்ற கட்டிடம்

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது. இன்று…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

You Might Also Like

இந்தியா

காசா இனப்படுகொலை: மோடி அரசு மீது சோனியா காந்தி குற்றச்சாட்டு

காசா இனப்படுகொலை விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் சாதிப்பதாகவும், பாகிஸ்தானுக்கு மத்தியஸ்தர் இடத்தை மத்திய அரசு வழிவிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

1 Min Read
இந்தியா

அயோத்தி ராமர் கோவில் வணிகமயம்: உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

அயோத்தி ராமர் கோவில் ஆன்மிக மையமாக இருக்க வேண்டும், ஆனால் பா.ஜனதா அதை வணிகமயமாக்கிவிட்டதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.

0 Min Read
இந்தியா

லே: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – ஜெனரல் உட்பட 3 பேர் காயம்!

லே பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் மேஜர் ஜெனரல் சச்சின் மேதா உட்பட 3 ராணுவ அதிகாரிகள் காயமடைந்தனர். சிகிச்சைக்குப் பின் அனைவரும் நலமுடன்…

1 Min Read
இந்தியா

மத்தியப்பிரதேசத்தில் கார் மோதி 2 பேர் பலி: ஒருவர் படுகாயம்

மத்தியப்பிரதேசத்தில் அதிவேக கார் பைக் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?