MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து: நாடு முழுவதும் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிபிஐ தீவிர விசாரணை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து: நாடு முழுவதும் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிபிஐ தீவிர விசாரணை
இந்தியா

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து: நாடு முழுவதும் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிபிஐ தீவிர விசாரணை

Admin
Last updated: May 13, 2026 6:52 am
Admin
Share
SHARE

வினாத்தாள் கசிந்தது கண்டறியப்பட்டதால், மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த 3-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். இந்த சூழலில் நீட் தேர்வுக்கு முன்பாக ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் ராஜஸ்தான் போலீசார் இணைந்து நடத்திய விசாரணையில் பல்வேறு மாநிலங்களில் வினாத்தாள் கசிந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுதொடர்பாக என்.டி.ஏ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய அளவிலான தேர்வுகளை நேர்மையாகவும், நம்பகத்தன்மையுடனும் நடத்த என்.டி.ஏ உறுதி பூண்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்களை விசாரிக்க மத்திய புலனாய்வு அமைப்புகளை கேட்டுக்கொண்டோம். அந்த அமைப்புகள் விசாரணை நடத்தி என்.டி.ஏ-விடம் விரிவான அறிக்கையை சமர்ப்பித்தன. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

நீட் மறுதேர்வுக்கு புதிதாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. தேர்வுக் கட்டணமும் செலுத்த வேண்டாம். ஏற்கனவே செலுத்திய தேர்வுக் கட்டணம் திரும்ப வழங்கப்படும். என்.டி.ஏ-வின் சொந்த நிதியில் மறுதேர்வு நடத்தப்படும். மாணவ, மாணவிகள் ஏற்கனவே எழுதிய தேர்வு மையங்களில் மறுதேர்வு நடத்தப்படும். மறுதேர்வுக்கான தேதி, ஹால் டிக்கெட் குறித்து என்.டி.ஏ சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு neet-ug@nta.ac.in இ-மெயில் முகவரி மற்றும் 011-40759000 / 011-69227700 தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு என்.டி.ஏ தெரிவித்துள்ளது.

தேசிய தேர்வு முகமை தலைவர் சுபோத் குமார் சிங் கூறும்போது, 'மாணவ, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் அகற்றப்படுவார்கள். வலுவான பாதுகாப்பு நடைமுறைகளோடு நீட் மறுதேர்வு நடத்தப்படும். இதுதொடர்பாக விரைவில் விரிவான வழிகாட்டு நெறிகள் வெளியிடப்படும். இதன்மூலம் எதிர்காலத்தில் தவறுகள் நடைபெறுவது தடுக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

நீட் மறுதேர்வு குறித்து என்.டி.ஏ வட்டாரங்கள் கூறும்போது, 'வினாத்தாள் கசிவு காரணமாகவே நீட் மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. பாடத்திட்டம், வினாத்தாள், தேர்வு நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாது. மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்தில் மறுதேர்வு நடத்தப்படக்கூடும்' என்று தெரிவித்தன.

ரூ.100 கோடி வரை… நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ நேற்று வழக்குப்பதிவு செய்து முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளது. இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது: நீட் தேர்வுக்கான வினாத்தாளை அச்சிட்ட அச்சகம் அல்லது வாகனங்களில் வினாத்தாள் கொண்டு செல்லப்பட்ட போது வினாத்தாள் கசிந்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறோம். முதல் வினாத்தாளை வழங்கிய அச்சக ஊழியருக்கு ரூ.10 கோடி வரை வழங்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. வினாத்தாள் சில இடங்களில் ரூ.28 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.

இந்த வழக்கில் இதுவரை கைதானவர்களில் பெரும்பாலானோர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள். கேரளாவில் மருத்துவக் கல்லூரி மாணவர் பிடிபட்டுள்ளார். இதே வழக்கில் மகாராஷ்டிராவின் நாசிக்கில் சுபம் காரினார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் போபாலில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார். ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா, உத்தரகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களின் போலீஸாரிடம் இருந்து ஆதாரங்களைப் பெற்று முழுமையான விசாரணை நடத்தப்படும். தவறு செய்தவர்கள் நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள். இவ்வாறு சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததைக் கண்டித்து பல்வேறு மாணவர் சங்கங்கள் சார்பில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லி மட்டுமல்லாது பாட்னா, கோட்டா, சிகார், டேராடூன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் நேற்று போராட்டங்கள் நடத்தப்பட்டன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நல்ல முதல்வர் கிடைத்துவிட்டார் – ஆர்.ஜே. பாலாஜி
Next Article ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதலிடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் பினராயி விஜயனை சந்தித்த புதிய முதலமைச்சர் சதீசன்!

கேரளாவின் புதிய முதலமைச்சர் வி.டி.சதீசன், முன்னாள் முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து…

May 15, 2026

பிரதமர் மோடி யுஏஇ பயணம்: இந்தியா-யுஏஇ இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் மோடியின் இரண்டு மணி நேர யுஏஇ…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் மீது மத்திய அரசின் தாக்குதல் – ராகுல் காந்தி

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மோடி அரசின் தவறுக்கு மக்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்? – ராகுல் காந்தி கேள்வி

பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்ட திடீர் லிட்டருக்கு…

May 15, 2026

ஆந்திராவில் வெள்ளிதோறும் ‘வாகனமில்லா தினம்’: சைக்கிளில் முதல்வர்!

ஆந்திராவில் வெள்ளிக்கிழமை முதல் 'வாகனமில்லா தினம்' கடைபிடிக்கப்படும்.…

May 15, 2026

You Might Also Like

இந்தியா

‘நாட்டின் பொருளாதார நிலையை பிரதமர் மக்களுக்கு விளக்க வேண்டும்’ – அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் பொருளாதாரத்தைப் பாதுகாக்க பிரதமர் மோடி விடுத்த 7 கோரிக்கைகளுக்கு டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்து, நாட்டின்…

1 Min Read
இந்தியா

கேரள முதலமைச்சர் பதவி யாருக்கு? கே.சி. வேணுகோபால் vs வி.டி. சதீசன்; காங்கிரஸ் கட்சி தவிப்பது ஏன்?

இந்தியா கேரள முதலமைச்சர் பதவி யாருக்கு? கே.சி. வேணுகோபால் vs வி.டி. சதீசன்; காங்கிரஸ் கட்சி தவிப்பது ஏன்? கடந்த சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக இ

6 Min Read
இந்தியா

அமலாக்கத் துறை மீண்டும் சோதனை: பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா கைது

புதுடெல்லி: பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் சோதனை நடத்தி கைது செய்தனர். சண்டிகரின் செக்டர் 2-ல் உள்ள பஞ்சாப்…

1 Min Read
இந்தியா

3ஆம் கட்ட சிறப்பு வாக்காளர் திருத்தம்: 16 மாநிலங்களில் இன்று தொடக்கம்!

தேர்தல் ஆணையம், 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் 3ஆம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை இன்று முதல் தொடங்குகிறது. இதன் மூலம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?