MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தேர்வுக்கு முன்பே கசிந்த 135 நீட் தேர்வு வினாக்கள்.. ராஜஸ்தானில் சிக்கிய மாதிரி வினாத்தாள்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > தேர்வுக்கு முன்பே கசிந்த 135 நீட் தேர்வு வினாக்கள்.. ராஜஸ்தானில் சிக்கிய மாதிரி வினாத்தாள்!
இந்தியா

தேர்வுக்கு முன்பே கசிந்த 135 நீட் தேர்வு வினாக்கள்.. ராஜஸ்தானில் சிக்கிய மாதிரி வினாத்தாள்!

Admin
Last updated: May 11, 2026 7:53 pm
Admin
Share
SHARE

தேசிய தேர்வு முகாமையால் நடத்தப்படும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3 அன்று நடைபெற்று முடிந்தது. இதில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பு வினாக்கள் கசிந்துள்ள பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

மே 1ஆம் தேதியே ராஜஸ்தானின் சிகார் பகுதியில் இந்த வினாத்தாள் சுழற்சிக்கு வந்துள்ளது. இது மாணவர்களிடம் 20,000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கையால் எழுதப்பட்ட இந்த மாதிரி வினாத்தாள் பிரதியில் மொத்தம் 281 கேள்விகள் இருந்தன. மே 3 அன்று நடந்த அசல் நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 135 கேள்விகள் இந்த மாதிரி தாளில் இருந்தவற்றுடன் அப்படியே ஒத்துப்போகின்றன.

90 உயிரியல் கேள்விகளும், 45 வேதியியல் கேள்விகளும் அப்படியே அதில் இடம்பெற்றிருந்தன.

இவ்வாறு மொத்தமுள்ள 720 மதிப்பெண்களில், 600 மதிப்பெண்களுக்கான கேள்விகள் தேர்வுக்கு முன்னரே கசிந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராஜஸ்தான் போலீசார் இந்த மாதிரி தாளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த முறைகேட்டின் பின்னணியில் கேரளாவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் பயிலும், ராஜஸ்தான் மாநிலம் சூருவைச் சேர்ந்த எம்பிபிஎஸ் மாணவர் ஒருவருக்குத் தொடர்பு இருப்பதாகப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அவர்தான் மே 1 அன்று சிகாரில் உள்ள தனது நண்பருக்கு இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார். அங்கிருந்து விடுதிகள் மற்றும் பயிற்சி மையங்கள் வழியாக இது காட்டுத்தீயாகப் பரவியுள்ளது.

மேலும் வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் இந்த வினாத்தாள் பலமுறை பகிரப்பட்டுள்ளது. இது மிக அதிக அளவிலான மாணவர்களுக்குத் தேர்வுக்கு முன்னரே சென்றடைந்திருக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேசிய தேர்வு முகமை, தேர்வு முடிந்து நான்கு நாட்களுக்குப் பிறகுதான் முறைகேடு குறித்த தகவல் தங்களுக்குக் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளது.

விசாரணை அமைப்புகளின் ஆதாரங்களின் அடிப்படையில், வெளிப்படையான முறையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.

இது நீட் தேர்வின் தரவரிசைப் பட்டியலிலும், மருத்துவச் சேர்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘அரசியலில் புதிய பண்பாட்டை துவக்கி வைத்துள்ள முதல்-அமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகள்’ – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
Next Article “முதல்வர் விஜய்க்கு நான் ஜால்ரா போடவில்லை” – இயக்குநர் சேரன் விவரிப்பு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அமுல் பால் விலை உயர்வு: லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு!

இந்தியாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான அமுல், நாடு முழுவதும் பால் விலையை…

May 13, 2026

காரிஃப் பயிர்கள்: மத்திய அரசு அறிவித்த புதிய குறைந்தபட்ச ஆதார விலைகள்!

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, 2026-2027 சந்தைப்படுத்தல்…

May 13, 2026

சேலை சரியில்லை: மணமகள் மறுப்பு – திருமணமே நின்றது! குடும்பத்தில் மோதல்

உத்தர பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் உள்ள…

May 13, 2026

பிரிக்ஸ் மாநாடு: டெல்லி வந்தடைந்தார் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ்!

புதுடெல்லி: பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும்…

May 13, 2026

திருமணத்தில் ஸ்விக்கி டெலிவரி: பூசாரிக்கு விறகு கொடுத்த நபர் வைரல்!

தென்னிந்திய திருமணங்கள் எப்போதும் பரபரப்புக்கும், எதிர்பாராத நிகழ்வுகளுக்கும்…

May 13, 2026

You Might Also Like

இந்தியா

பஞ்சாப் மின்சாரத்துறை அமைச்சரை கைது செய்த அமலாக்கத்துறை.. கெஜ்ரிவால் கண்டனம்

பஞ்சாப் மாநில மின்சாரத் துறை அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவருமான சஞ்சீவ் அரோராவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. லூதியானா மேற்கு தொகுதியின் ஆம் ஆத்மி…

1 Min Read
இந்தியா

பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு – என்ஐஏ விசாரணை தீவிரம்

பெங்களூரு: பிரதமர் மோடி நேற்று கர்நாடகா சென்றிருந்த நிலையில், அவர் செல்லும் பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பாக…

1 Min Read
இந்தியா

1 வாக்கு வித்தியாசத்தில் வென்ற தவெக எம்எல்ஏ: உயர்நீதிமன்ற தடைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி ரத்து

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமாகா (தவெக) வேட்பாளர் சீனிவாச சேதுபதி, சட்டமன்றத்தில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடாது…

1 Min Read
இந்தியா

சுவேந்து அதிகாரி உதவியாளர் கொலை..3 பேர் கைது!

முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் உதவியாளரான சந்திரநாத் ரத் கொலை தொடர்பாக, மேற்கு வங்க காவல்துறை திங்களன்று பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களைக்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?