MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மோடி பிரதமரான பிறகு 9 மாநிலங்களில் முதல்முறையாக பா.ஜனதா ஆட்சி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > மோடி பிரதமரான பிறகு 9 மாநிலங்களில் முதல்முறையாக பா.ஜனதா ஆட்சி
இந்தியா

மோடி பிரதமரான பிறகு 9 மாநிலங்களில் முதல்முறையாக பா.ஜனதா ஆட்சி

Admin
Last updated: May 10, 2026 11:24 am
Admin
Share
SHARE

மோடி பிரதமரான பிறகு. 9 மாநிலங்களில் பா.ஜனதா முதல் முறையாக ஆட்சி அமைந்துள்ளது. மோடி பிரதமரான 2014-ம் ஆண்டு, அரியானா, மராட்டிய மாநிலங்களில் பா.ஜனதாவின் வெற்றிப்பயணம் தொடங்கியது. அரியானாவில், முதல்முறையாக அமைந்த பா.ஜனதா ஆட்சியில் மனோகர்லால் கட்டார் முதல்-மந்திரி ஆனார்.

அதே ஆண்டு, மராட்டிய மாநிலத்தில் பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவானது. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரி ஆனார். 2016-ம் ஆண்டு, வடகிழக்கில் பா.ஜனதா கால் பதிக்கத் தொடங்கியது. அந்த ஆண்டு, அசாம் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, சர்பானந்தா சோனோவால் தலைமையில் முதலாவது பா.ஜனதா ஆட்சி பதவி ஏற்றது.

அப்போதிருந்து ஆட்சியை தக்கவைத்து வருகிறது. அதே ஆண்டில், மற்றொரு வடகிழக்கு மாநிலமான அருணாசலபிரதேசத்திலும் முதல் முறையாக பா.ஜனதா ஆட்சி அமைந்தது. காங்கிரசை சேர்ந்த முதல்-மந்திரி பெமா காண்டு, 33 எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவில் சேர்ந்து பா.ஜனதா ஆட்சி அமைத்தார்.

2017-ம் ஆண்டு, மணிப்பூரில், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து, பிரேன்சிங் தலைமையில் முதல்முறையாக பா.ஜனதா ஆட்சி அமைந்தது. 2018-ம் ஆண்டு, திரிபுராவில், முதல்முறையாக பிப்லப் குமார் தேவ் தலைமையில் பா.ஜனதா ஆட்சி பதவியேற்றது. 2024-ம் ஆண்டு, ஒடிசா சட்டசபை தேர்தலில் 24 ஆண்டுகால பிஜு ஜனதாதள ஆட்சியை வீழ்த்தி, பா.ஜனதா ஆட்சி அமைத்தது.

பீகாரில், கூட்டணி ஆட்சியில் பா.ஜனதா இருந்துள்ளது. கடந்த மாதம் நிதிஷ்குமார் பதவி விலகியவுடன், முதல்முறையாக பா.ஜனதா தலைமையில் ஆட்சி அமைந்தது. தற்போது. மேற்கு வங்காளத்தில், முதல்முறையாக பா.ஜனதா அரசு பதவியேற்றுள்ளது. இதுபற்றி பா.ஜனதா தேசிய செய்தித்தொடர் பாளர் ஷெசாத் பூனவல்லா கூறுகையில், ‘இன்று 21-22 மாநி லங்களில் பா.ஜனதா மற்றும் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந் திய மக்கள்தொகையில் 78 சதவீதத்தை பா.ஜனதா கூட்டணி ஆட்சி ஆள்கிறது. நிலப்பரப்பில் 72 சதவீதத்தை ஆள்கிறது” என்றார்.

பா.ஜனதா தேசிய செய்தித்தொடர்பாளர் துஹின் ஏ.சின்ஹா கூறுகையில், “தமிழ்நாடு, கேரளா ஆகிய 2 தென் மாநிலங்களை தவிர, நாடு முழுவதும் பா.ஜனதா வலிமையான இடத்தில் உள்ளது. அந்த 2 மாநிலங்களும் கட்சியின் வருங்கால விஸ்தரிப்பு திட்டத்தில் இடம் பெற்றுள்ளன” என்றார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இலைக் கட்சி எம்எல்ஏக்களை ‘இழுத்து வர’ முடியுமா? | உள்குத்து உளவாளி
Next Article அமமுக எம்எல்ஏ காமராஜை டிடிவி தினகரன் மிரட்டுகிறார்: பெங்களூரு புகழேந்தி குற்றச்சாட்டு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

5 வயது சிறுமிக்கு பாலியல் துயரம்: சிறுவர்கள் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு

சென்னையில் 5 வயது சிறுமிக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறிய சம்பவம் அதிர்ச்சியை…

June 25, 2026

காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தில் 5 பேர் பரிதாபம்

காவிரி ஆற்றங்கரையில் செல்பி எடுக்க முயன்ற ஒரே…

June 25, 2026

போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி…

June 25, 2026

25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்

சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை,…

June 25, 2026

அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, அயோத்தி ராமர்…

June 25, 2026

You Might Also Like

இந்தியா

சுவேந்து அதிகாரி உதவியாளர் கொலை..3 பேர் கைது!

முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் உதவியாளரான சந்திரநாத் ரத் கொலை தொடர்பாக, மேற்கு வங்க காவல்துறை திங்களன்று பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களைக்…

1 Min Read
இந்தியா

சென்னையில் குளிர்ந்த வானிலை: விமான சேவைகள் பாதிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று திடீரென வானிலை மாற்றம் ஏற்பட்டு குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

2 Min Read
இந்தியா

பேராசிரியை தற்கொலை: ஆண் நண்பர் கைது

சென்னை அண்ணா நகரில் பேராசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவருக்கு தற்கொலைக்கு தூண்டியதாக அவரது ஆண் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். தீவிர…

1 Min Read
இந்தியா

உ.பி-யில் கனமழை: 111 பேர் பலி – மீட்புப் பணிகள் தீவிரம்!

உத்தரப்பிரதேசத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து 111 பேர் உயிரிழந்த நிலையில், மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?