இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி பயன்படுத்தும் ஒரு தண்ணீர் பாட்டில் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தண்ணீர் பாட்டிலின் விலை சுமார் 44 லட்சம் ரூபாய் என கூறப்படுவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விலை உயர்ந்த தண்ணீர் பாட்டில் 'அக்வா டி கிரிஸ்டாலோ மோடிலியானி' (Acqua di Cristallo Tributo a Modigliani) என்ற உலகின் மிக விலையுயர்ந்த தண்ணீர் பிராண்டுகளில் ஒன்றாகும். சாதாரண ஒரு பாட்டில் தண்ணீரின் விலை அதிகபட்சம் 20 ரூபாய் இருக்கும் நிலையில், இந்த பாட்டிலின் விலை 44 லட்சம் ரூபாய் என்பது நம்புவதற்கே கடினமாக உள்ளது. சுமார் 750 மில்லி தண்ணீர் கொள்ளளவு கொண்ட இந்த பாட்டிலின் அசாதாரண விலைக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.
இந்த தண்ணீர் பாட்டில் முழுக்க முழுக்க 24 காரட் தங்கத்தால் ஆனது. மேலும், இதை பிரபல பாட்டில் வடிவமைப்பாளரான ஃபெர்னான்டோ அல்டமிரானோ வடிவமைத்துள்ளார். இதுவே இதன் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இந்த பாட்டிலில் நிரப்பப்பட்டுள்ள தண்ணீர், பிரான்ஸ் மற்றும் பிஜி போன்ற நாடுகளின் எதிர் துருவங்களில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தண்ணீரை பருகுவதால் அதிக உத்வேகம் கிடைப்பதாகவும், சுவை மிகுந்ததாகவும் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இது போன்றே ஜப்பான் நாட்டில் 'கோனா நிகரி' என்ற பெயரில் விற்கப்படும் தண்ணீர் பாட்டில் சுமார் 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஹவாய் தீவின் ஆழ்கடலில் சுமார் 2000 மீட்டர் ஆழத்திலிருந்து எடுக்கப்படும் இந்த தண்ணீரில் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக நம்பப்படுகிறது.
நீதா அம்பானி இந்த விலைமதிப்பற்ற தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் அருந்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, இந்த விஷயம் நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது. இந்த தண்ணீர் பாட்டில், அதன் விலை மற்றும் சிறப்பு காரணமாக உலக சாதனை புத்தகமான கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.
இந்த பாட்டிலின் சிறப்பு என்னவென்றால், இதில் உள்ள தண்ணீர் மிகத் தூய்மையானதாகக் கருதப்படுகிறது. மேலும், பாட்டில் முழுவதும் தங்கம் கொண்டு செய்யப்பட்டிருப்பதும், தங்கம் முலாம் பூசப்பட்டிருப்பதும் இதன் விலைக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. இந்த விலை உயர்ந்த தண்ணீர் பாட்டில், உலகின் மிக விலையுயர்ந்த குடிநீர் பாட்டில் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.
