திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்கிறது. நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் மட்டும் 80 ஆயிரத்து 167 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும், 28 ஆயிரத்து 270 பக்தர்கள் தங்களது முடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். அன்றைய தினம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் ரூ.4 கோடியே 96 லட்சமாக பதிவாகியுள்ளது.
அன்றைய தினம் லட்டு விற்பனை 4.10 லட்சமாக இருந்தது. அன்னப்பிரசாதம் பெற்ற பக்தர்களின் எண்ணிக்கை 1.97 லட்சமாக பதிவாகியுள்ளது. இது பக்தர்களின் பெரும் நம்பிக்கையையும், காணிக்கை செலுத்தும் ஆர்வத்தையும் காட்டுகிறது.
தொடர்ந்து பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால், கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது. உண்டியல் காணிக்கை, லட்டு விற்பனை, முடி காணிக்கை போன்ற வருவாய்கள் கோவில் திருப்பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.