முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான அனிதா ராதாகிருஷ்ணன், தனது மனுவில், ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை பிரதான எதிர்க்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தான் பேசியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரை ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரியுள்ளார்.
இந்த முன்ஜாமீன் மனு விரைவில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கு விசாரணை முடிவில் என்ன தீர்ப்பு வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.