சென்னை அருகே கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், முதல்வர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமைப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தோழமைக் கட்சித் தலைவர்களுடன் தனித்தனியாக முதல்வர் விஜய் கலந்தாலோசித்து வருகிறார்.
தவெக தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் இடதுசாரிகள் பங்கேற்கவில்லை. இதுகுறித்து இடதுசாரிகள் தரப்பில், 'வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை' என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருமாவளவன், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், புதிய கூட்டணி அமைப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வரவிருக்கும் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களை எதிர்கொள்வது குறித்தும் தீவிரமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகள், தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் விஜய்யின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.