MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அதிமுக துணைப் பொதுச்செயலாளராக எஸ்.பி. வேலுமணி நியமனம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > அதிமுக துணைப் பொதுச்செயலாளராக எஸ்.பி. வேலுமணி நியமனம்!
தமிழ்நாடு

அதிமுக துணைப் பொதுச்செயலாளராக எஸ்.பி. வேலுமணி நியமனம்!

Admin
Last updated: June 26, 2026 8:04 am
Admin
Share
SHARE

அதிமுகவில் உட்கட்சி பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, எஸ்.பி. வேலுமணிக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அதிமுக துணை பொதுச் செயலாளராக நத்தம் இரா. விசுவநாதன், எஸ்.பி வேலுமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கழகத் தலைமை நிலைய செயலாளராக வரகூர் அருணாச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார். கழக அமைப்புச் செயலாளர்களாக தங்கமணி, கருப்பணன், சண்முகநாதன், கே.பி. அன்பழகன், காமராஜ், கே.சி வீரமணி, பாலகிருஷ்ண ரெட்டி, கோ. அரி, கிருஷ்ணமுரளி, மருதராஜ், பி சௌந்தர்ராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்கள், அனைத்துலக எம்ஜிஆர் மன்றத்தின் இணைச்செயலாளர் ஆகியோரை நியமித்து எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்த சூழலில், அதிமுக தலைமைக்கு எதிராக சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி ஆகியோரும், அவர்களின் ஆதரவாளர்களும் போர்க்கொடி தூக்கினர். மேலும், தவெக ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் 25 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

இதையடுத்து, அந்த எம்எல்ஏக்களை அவர்கள் வகித்து வந்த கட்சிப் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக்கி வைத்தார். தொடர்ந்து, எடப்பாடி அணி, எஸ்பி வேலுமணி அணி என இரு அணிகளாக பிரிந்து இரு தரப்பினரும் மாறி மாறி விமர்சனங்களை வெளிப்படுத்தினர். இருப்பினும், கட்சியின் நலன் கருதி இரு துருவங்களாக இருந்து வந்த இரண்டு அணியினரும் மீண்டும் ஒரே அணியாக செயல்பட துவங்கினர்.

ஓரணியாக செயல்பட துவங்கிய பின்னரும் எடப்பாடி பழனிச்சாமிக்கும், எஸ்பி வேலுமணிக்கும் இடையே இணக்கம் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டு வந்தது. மேலும், எஸ்.பி. வேலுமணியிடம் இருந்து பறிக்கப்பட்ட பொறுப்புகள் மீண்டும் வழங்காததால் அரசியல் ரீதியாக அது பெரும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. மேலும், மீண்டும் அதிமுகவில் பிளவு ஏற்படுமோ என்ற கருத்தும் பரவி வந்தது. இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது எஸ்.பி. வேலுமணிக்கு புதிய பொறுப்பை வழங்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் வழங்கியுள்ளார். அதேபோல், முன்னாள் அமைச்சர் காமராஜ், தங்கமணி, நத்தம் விசுவநாதன் ஆகியோருக்கும் கட்சியில் பொறுப்பு வழங்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ADMKTamil Nadu Politicsஅதிமுகஅரசியல்எடப்பாடி பழனிச்சாமிஎஸ்.பி.வேலுமணி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்தியா vs அயர்லாந்து: வைபவ் அறிமுகம்? அபிஷேக் சர்மாவுக்கு ஓய்வா?
Next Article அவசர நிலை: ஜனநாயகம் நசுக்கப்பட்டது – மோடி குற்றச்சாட்டு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

EPFO சேவைகள் மூன்று நாட்கள் நிறுத்தம்: முக்கிய தகவல்கள்!

வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது இணையதள சேவைகளை ஜூன் மாதத்தில்…

June 26, 2026

அவசர நிலை: ஜனநாயகம் நசுக்கப்பட்டது – மோடி குற்றச்சாட்டு

1975 ஜூன் 25 அன்று இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட…

June 26, 2026

பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு: மத்திய அரசின் அறிவிப்பு

மத்திய அரசு பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஜூலை…

June 25, 2026

பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார் விகே பாண்டியனின் மனைவி சுஜாதா ராவத்

விகே பாண்டியனின் மனைவியும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான…

June 25, 2026

பெங்களூரு கொலை: தாய், தந்தை, தங்கையை கொன்று தப்பிய பெண் புதுவையில் கைது

பெங்களூருவில் பெற்றோரையும் தங்கையையும் கொலை செய்துவிட்டு தப்பி…

June 25, 2026

You Might Also Like

அரசியல்

விஜய் மீது சிபிஐ வழக்கு?: அதிமுக எம்.பி. கருத்தால் சர்ச்சை

முதல்வர் ஸ்டாலின் மீது சிபிஐ வழக்கு தொடர வாய்ப்புள்ளதாக அதிமுக எம்.பி. இன்பதுரை கருத்து தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

சொகுசு பஸ்ஸில் தவெக எம்.எல்.ஏ.க்கள்: சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு

தமிழக சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் த.வெ.க. அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. மாமல்லபுரத்தில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்கள் சொகுசு பேருந்தில் சட்டசபைக்கு வந்தனர்.…

1 Min Read
அரசியல்

சனாதனம் ஒரு வாழ்க்கை முறை: உதயநிதிக்கு நடிகர் அர்ஜூன் பதிலடி

சனாதன தர்மம் ஒரு வாழ்க்கை முறை என்றும், அதைப்பற்றி புரிதல் இல்லாமல் பேசக்கூடாது என்றும் நடிகர் அர்ஜூன் தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

ஈரோடு: 70 டன் ரயில் பெட்டி கிரேனில் இருந்து விழுந்து விபத்து!

ஈரோடு லோகோ பணிமனையில் 70 டன் எடை கொண்ட ரயில் பெட்டி கிரேனில் இருந்து விழுந்து விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை. விசாரணை நடைபெறுகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?