வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், பிரதமர் மோடி 2,400 கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத்தொகையை வழங்கியுள்ளார். இதன் மூலம், முதல்முறையாக வேலையில் சேர்ந்து பிஎப் கணக்கில் இணைந்த 15 லட்சம் ஊழியர்களுக்கு தலா 15,000 ரூபாய் ஊக்கத்தொகை கிடைக்கப்பெறும்.
மத்திய அரசின் இந்த 'வளர்ச்சி அடைந்த பாரதம் வேலைவாய்ப்புத் திட்டத்தை' பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்காக ரூ.2,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் இளைஞர்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசுகையில், 'இந்தியாவின் இளைஞர் சக்தி குறித்து உலகம் பேசுகிறது. அவர்களின் திறன்களை உலகம் அங்கீகரிக்க தொடங்கியுள்ளது' என்று குறிப்பிட்டார். இந்த அறிவிப்பால் இளைஞர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி நிலவுகிறது.
முதல்முறையாக வேலைவாய்ப்பு பெற்று, தங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கில் இணைந்தவர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இது இளைஞர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய படியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.