நடிகை வனிதா விஜயகுமார் தனது முதல் காதல் குறித்து பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். 'என்னுடைய முதல் காதல் பற்றி இப்போது சொன்னால் தமிழ்நாடே அதிர்ந்து விடும்' என்று அவர் கூறியுள்ளார்.
யூடியூப் தளம் ஒன்றில் பேசிய வனிதா, 'என்னுடைய முதல் காதல் பற்றி பேச வேண்டும் என்றால், என்னால் இப்போது எதையும் வெளிப்படையாக பேச முடியாது. என்னை முதன் முதலாக காதலித்தது யார்? அல்லது நான் யாரை முதன் முதலில் காதலித்தேன் என்பதை என்னால் வெளியே சொல்லவே முடியாது. அப்படி நான் அந்த உண்மையை சொன்னால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதிர்ந்துவிடும்' என்று தெரிவித்தார்.
இதனால், அந்த ரகசியத்தை சொல்லாமல் மௌனமாக இருப்பதே நல்லது என்றும், தனது முதல் காதலை சொல்லாமலே பல வருடங்களை கடந்து வந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது நினைவுகள் எப்போதும் தனக்குள்ளேயே இருக்கும் என்றும், முதல் காதல் ரகசியம் தனக்கும் சம்பந்தப்பட்ட அந்த நபருக்கும் மட்டுமே தெரியும் என்றும் வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.