ஈரோடு மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த 5 எலைட் மதுபான கடைகள் திடீரென மீண்டும் திறக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 20 நாட்களாக மூடப்பட்டிருந்த இந்த டாஸ்மாக் கடைகளில் மீண்டும் மது விற்பனை தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் மத வழிபாட்டுத்தலங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு அருகில் இருந்த 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார். பொதுமக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும், மூடப்பட்ட கடைகளின் பட்டியலையும் அரசு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், ஈரோட்டில் முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதற்கு அதிகாரிகள் ‘மேலிட உத்தரவு’ என விளக்கமளித்துள்ளனர். இந்த திடீர் திறப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது குறிப்பிடத்தக்கது.
மூடப்பட்ட மதுக்கடைகளை எந்தவித அறிவிப்புமின்றி, பெயர் பலகைகள் கூட இல்லாமல் மீண்டும் திறந்ததற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.