சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினமான ஜூன் 26 அன்று, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 'ஸ்டாப் Run, ஸ்டாப் Drugs' என்ற பெயரில் மாபெரும் போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் தொலைநோக்குப் பார்வை மிக்க தலைமையின் கீழ், விளையாட்டை ஒரு சக்திவாய்ந்த சமூக மாற்றக் கருவியாகக் கருதி தமிழக அரசு செயலாற்றி வருகிறது. இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமான வழியில் செலுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்து, சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதே அரசின் தலையாய நோக்கமாகும். 'போதைப்பொருள் இல்லாத தமிழகம்' என்ற உன்னத இலக்கை நோக்கிய பயணத்தில், தூய்மையான, நேர்மையான மற்றும் அறநெறி சார்ந்த விளையாட்டுக் கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதில் தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது.' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினமான ஜூன் 26 அன்று, இது குறித்த விழிப்புணர்வை மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இந்த 'ஸ்டாப் Run, ஸ்டாப் Drugs' போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. 6 கி.மீட்டர் தூரம் நடைபெறும் இந்த ஓட்டம் ஜூன் 26 ஆம் தேதி காலை 6 மணிக்கு காமராஜர் சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் தொடங்கி, ஔவையார் சிலை வரை சென்று, பின்னர் நேப்பியர் பாலம் வழியாக தீவுத்திடலை வந்தடையும்.
இந்த சிறப்புமிக்க போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தில் கலந்துகொள்ள விரும்பும் ஆர்வலர்கள், www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகிற 22.06.2026 வரை தங்களது பதிவுகளை மேற்கொள்ளலாம். மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இந்த போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தில் பங்குபெற்று, 'போதைப்பொருள் இல்லாத தமிழகம்' உருவாக துணை நிற்க விரைந்து பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தமிழக அரசு விளையாட்டை ஒரு சக்திவாய்ந்த சமூக மாற்றக் கருவியாகக் கருதி, இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமான வழியில் செலுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்து, சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதை தலையாய நோக்கமாகக் கொண்டுள்ளது. 'போதைப்பொருள் இல்லாத தமிழகம்' என்ற உன்னத இலக்கை அடைய, தூய்மையான, நேர்மையான மற்றும் அறநெறி சார்ந்த விளையாட்டுக் கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதில் தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது.